18 ஜனவரி 2012

பயங்கரவாத பட்டியலிலிருந்து தமிழீழ விடுதலை புலிகள் நீக்கப்பட வேண்டும்.

நெதர்லாந்தில் தமிழீழ விடுதலைப்புலிகளுக்கு நிதி சேகரித்த குற்றச்சாட்டின் பேரில் தண்டனை பெற்றுள்ள ஐந்து இலங்கைத் தமிழர்களும் தாக்கல் செய்த மேன்முறையீட்டின் விசாரணைகள் நேற்று முன்தினம் ஹேக்கில் ஆரம்பமாகின.குறித்த ஐந்து பேரினதும் வழக்கு தீர்ப்பின்போது, கடந்த 2011 ஒக்டோபர் 21ஆம் திகதி தமிழீழ விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்று நீதிபதி அறிவித்திருந்தார்.
இந்தநிலையில், பயங்கரவாத பட்டியலில் இருந்து தமிழீழ விடுதலைப்புலிகள் நீக்கப்படவேண்டும்.
அத்துடன், பயங்கரவாத அமைப்பாக கருதப்பட்ட தமிழீழ விடுதலைப் புலிகளுக்கு நிதியளித்தனர் என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் தண்டனை வழங்கப்பட்டுள்ள ஐவரினதும் தீர்ப்புகள் ரத்துச் செய்யப்பட வேண்டும் என்று குறித்த ஐந்து பேரினதும் சார்பில் ஆஜரான சட்டத்தரணிகள் Buruma மற்றும் Victor Koppe ஆகியோர் லக்சம்பேக் நீதிமன்றத்தில் மேன்முறையீட்டை தாக்கல் செய்தனர். இது தொடர்பான வழக்கு விசாரணை நேற்று முன்தினம் ஆரம்பமாகியுள்ளது.
இதேவேளை, இந்த மேன்முறையீட்டின் போது விடுதலைப்புலிகள் அமைப்பு பயங்கரவாத அமைப்பு அல்ல என்பது ஏற்றுக்கொள்ளப்படுமானால் அது முழு ஐரோப்பாவிலும் விடுதலைப்புலிகள் அமைப்பு தொடர்பாக கொள்கைகளில் மாற்றங்களை ஏற்படுத்தும் என உலக நெதர்லாந்து வானொலி தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக