05 ஜனவரி 2012

ஸ்ரீலங்கா அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் நெடியவன்,உருத்திரகுமாரன் ஆகியோர் ஈடுபட்டுள்ளனர்.

நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் பிரதமரான ருத்ரகுமார் மற்றும் விடுதலைப்புலிகளது அனைத்துலக செயற்பாட்டாளரான நெடியவன் ஆகியோர், 67 உள்நாட்டு சர்வதேச நிறுவனங்களுடன் இணைந்து சிறிலங்கா அரசைக் கவிழ்க்கும் முயற்சியில் ஈடுபட்டுள்ளனர் என திவயின சிங்களப் பத்திரிகையின் இன்றைய கண்டுபிடிப்பு தெரிவித்துள்ளது.
அதுவும் இந்த வருடத்துக்குள்ளே சிறிலங்கா அரசை இவர்கள் கவிழ்த்து விடுவர் எனவும் அது கூறியுள்ளது.இந்தத் தகவலை சிறிலங்கா அரசுக்கு புலிகளுக்கு எதிரான தமிழத் தரப்பே தெரிவித்துள்ளது என்றும் கூறும் திவயின மேலும் தெரிவித்துள்ளதாவது:
நேற்று முன்தினம் தமிழகத்திலிருந்து ஒளிப்பரப்பாகும் விஜய் தொலைக்காட்சியில் உரையாற்றிய சோதிடர்கள் சிலர், 2012 ஆம் ஆண்டு தற்போதைய இலங்கை அரசாங்கம் அதிகாரத்தை இழக்கும் என தெரிவித்துள்ளனர். அத்துடன் ஈழ ஆதரவாளர்களின் பலம் அதிகரிக்கும் என கூறியுள்ளதாகவும் இதன் மூலம் இந்த திட்டம் உறுதியாகி விடும்.
விஜய் தொலைக்காட்சி, இதனை ஒளிப்பரப்புவதற்கு முன்னர், யாழ்ப்பாண குடாநாட்டில், முன்னாள் விடுதலைப்புலி உறுப்பினர்களை ஒன்றிணைத்து, மீண்டும் விடுதலைப்புலிகள் அமைப்புக்கு உயிரூட்ட, புலம்பெயர் தமிழர்கள் மேற்கொண்டிருந்த ரகசியமான வேலைத்திட்டங்கள் தொடர்பான தகவல்களை இராணுவ புலனாய்வு பிரிவினர் கண்டறிந்திருந்தனர் எனவும் திவயின கூறியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக