22 ஜனவரி 2012

யாழில் மாணவர்களை எச்சரித்து துண்டு பிரசுரங்கள்!

இன்று மதியம் முதல் மாணவர்களை எச்சரிக்கும் சுவரொட்டிகளும் துண்டு பிரசுரங்களும் குடாநாடு எங்கும் பரவலாக காணப்பட்டது.குறிப்பாக கஸ்தூரியார் வீதி, திருநெல்வேலி, கோப்பாய், கொக்குவில், போன்ற பல இடங்களில் காணக்கூடியதாக இருந்தது.
ஆனால் மாணவர்கள் துணிவுடன் அதனை அகற்றுவதையும் பார்க்க முடிந்தது . இந்து கல்லூரில் காணப்பட்ட பிரசுரங்களை மாணவர்கள் தீ இட்டு கொளுத்தினர். இந்த எச்சரிக்கையின் பின்னர் 4 மாணவர்கள் கடத்தப்பட்டனர்,மீண்டும் இது தலை தூக்கி இருப்பது பெற்றோர் மத்தியில் கலக்கத்தை உண்டு பண்ணியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக