22 ஜனவரி 2012

பான் கீ மூன் மீது இன்னர் சிற்றி பிரஸ் விசனம்.

இலங்கையில் இடம்பெற்றதாகக் கூறப்படும் மனித உரிமை மீறல்கள் தொடர்பாக ஐ.நா. நிபுணர் குழுவால் அறிக்கை சமர்ப்பிக்கப்பட்டு பல மாதங்கள் கடந்துள்ள நிலையிலும், அவ் அறிக்கை தொடர்பாக ஐக்கிய நாடுகள் சபையின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லையென இன்னர் சிற்றி பிரஸ் விசனம் தெரிவித்துள்ளது.
இலங்கை மீது சர்வதேச விசாரணைகளை மேற்கொள்ளப்படுவதை தாம் பெரிதும் விரும்புவதாகவும் இன்னர் சிற்றி பிரஸ் மேலும் தனது அறிக்கையில் தெரிவித்துள்ளது. இலங்கையில் இடம் பெற்றதாக கூறப்படுகின்ற மனித உரிமை மீறல்கள் தொடர்பாக விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கை சமர்ப்பிக்குமாறு பான் கீ மூன், மூவர் அடங்கிய குழுவொன்றை நியமித்திருந்தார்.
அக்குழு விசாரணைகளை மேற்கொண்டு அறிக்கையை சமர்ப்பித்துள்ள போதிலும், அது தொடர்பாக ஐக்கிய நாடுகளின் செயலாளர் நாயகம் பான் கீ மூன் இதுவரை விசாரணைகளை மேற்கொள்ளவில்லை. இந்த நிலையிலேயே இன்னர் சிற்றி பிரஸ் தனது விசனத்தை தெரிவித்துள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக