
இவர் அமெரிக்கா செல்கின்றமைக்கு 2004 ஆம் ஆண்டு ஜூன் 09 ஆம் திகதி கொழும்பு தூதரகத்தில் விண்ணப்பித்து இருக்கின்றார்.
இவருக்கான விசாவை வழங்குகின்ற முன்னெடுப்புக்களில் தூதரகம் ஈடுபட்டு இருந்தது.
ஆனால் தூதரகத்துக்கு பேரதிர்ச்சி காத்திருந்தது.
அமெரிக்காவின் கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இரா. சம்பந்தன் உள்ளார் என்று அமெரிக்க வெளியுறவு அமைச்சில் இருந்து தொலைபேசி, மின்னஞ்சல் ஆகியவை மூலம் கொழும்புத் தூதரகத்துக்கு அறிவுறுத்தப்பட்டது.
ஆனால் சம்பந்தர் ஒரு சிரேஷ்ட அரசியல்வாதி என்றும் கனவான் என்றும் பயங்கரவாதி அல்லர் என்றும் முன்பு பல தடவைகள் விசா பெற்று அமெரிக்கா வந்திருக்கின்றார் என்றும் தூதரக அதிகாரிகள் அவசரமாக அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அறிவித்தனர்.
தமிழ் தேசிய கூட்டமைப்பு உறுப்பினர்கள் பயங்கரவாதிகள் அல்லர் என்றும் இவர்களுக்கு விசா நிராகரிக்கப்படுகின்றமையை ஏற்றுக் கொள்ள முடியாது என்றும் வலியுறுத்தி இருந்தனர்.
சம்பந்தரின் பெயரை கண்காணிக்கப்படுவோர் பட்டியலில் இருந்து நீக்க வேண்டும் என்று கண்டிப்பாக கேட்டு இருந்தனர்.
2004 ஆம் ஆண்டு ஜூன் 10 ஆம் திகதி கொழும்புத் தூதரகத்தில் இருந்து அமெரிக்க வெளியுறவு அமைச்சுக்கு அனுப்பப்பட்ட இராஜதந்திர ஆவணம் ஒன்றில் இத்தகவல்கள் விக்கிலீக்ஸ் மூலம் கிடைக்கப் பெற்று உள்ளன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக