17 ஜனவரி 2012

ஆயுதம் ஏந்தி போராடப் போவதில்லை என ஜே.வி.பியின் இரு அணியும் அறிவிப்பு.

அரசாங்கத்தை கவிழ்க்க ஆயுதம் ஏந்திப் போராட போவதில்லை என மக்கள் விடுதலை முன்னணியும், அதன் கிளர்ச்சிக்குழுவும் அறிவித்துள்ளன.
சூழ்ச்சித் திட்டங்கள் மற்றும் ஆயுத போராட்டத்தின் மூலம் அரசாங்கங்களை கவிழ்க்கும் நடைமுறையானது காலம் கடந்த ஓர் வழமையாகும் என இரு தரப்பும் கூறியுள்ளன.
தாம் ஒருபோதும் இவ்வாறான முயற்சிகளில் ஈடுபடப் போவதில்லை என அவர்கள் குறிப்பிட்டுள்ளனர்.. உலகின் எந்தவொரு நாட்டிலும் சூழ்ச்சித் திட்டங்களின் மூலம் அண்மையில் ஆட்சிகள் கவிழ்க்கப்படவில்லை எனவும், மக்கள் போராட்டங்களின் மூலமே ஆட்சி கவிழ்க்கப்பட்டுள்ளதாகவும் மக்கள் விடுதலை முன்னணியின் நாடாளுமன்ற உறுப்பினர் அநுரகுமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்..
இலங்கை மற்றும் உலக அனுபவங்களை கருத்திற் கொண்டால் அயுத போராட்டம் பொருத்தமற்றது என்பது புரியும் என கிளர்ச்சிக்குழு உறுப்பினர் சமீர கொஸ்வத்த குறிப்பிட்டுள்ளார்... ...
ஆயுத போராட்டத்தின் மூலம் அரசாங்கத்தை கவிழ்க்க முயற்சிப்பதாக எவரேனும் குற்றஞ்சுமத்தினால் அவரது உள நிலை சோதனைக்கு உட்படுத்தப்பட வேண்டுமென அவர் தெரிவித்துள்ளார்.
மக்கள் விடுதலை முன்னணியும், கிளர்ச்சிக்குழுவினரும் ஆயுத போராட்டமொன்றுக்கு தயாராவாக உயர்கல்வி அமைச்சர் எஸ்.பி. திஸாநாயக்க அண்மையில் கருத்து தெரிவித்திருந்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக