02 ஜனவரி 2012

க.பொ.த.உயர்தரம் கூட படிக்காமல் சட்டவாளரானவர் மகிந்த ராஜபக்ஸ!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்ச கபொத உயர்தர கல்வியைக் கூட கற்கவில்லை என்று அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்தின் தகவல் பரிமாற்றக் குறிப்புகளில் கூறப்பட்டுள்ளதாக விக்கிலீக்ஸ் தகவல் வெளியிட்டுள்ளது.
சிறிலங்காவின் 5வது நிறைவேற்று அதிகாரமுள்ள அதிபராக மகிந்த ராஜபக்ச தெரிவு செய்யப்பட்டபோது, கொழும்பில் இருந்த அமெரிக்கத் தூதுவர் ஜெப்ரி லன்ஸ் ரீட் 2005 நவம்பர் 21ம் நாள் அமெரிக்க இராஜாங்கத் திணைக்களத்துக்கு இரகசியமான தகவல் ஒன்றை அனுப்பியிருந்தார்.
சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவின் வாழ்க்கைக் குறிப்புகள் அடங்கிய அந்த தகவல் பறிமாற்றக் குறிப்பிலேயே, மகிந்த ராஜபக்ச கபொத உயர்தரம் கூட படிக்கவில்லை என்ற தகவல் இடம்பெற்றுள்ளது.
கபொத உயர்தரக் கல்வியை பூர்த்தி செய்யாத மகிந்த ராஜபக்ச இப்போது ஒரு சட்டவாளர் என்று அமெரிக்கத் துதுவர் குறிப்பிட்டுள்ளார்.
சிறிலங்கா சுதந்திரக் கட்சியின் நிறுவுனர்களில் ஒருவரான டி.ஏ.ராஜபக்சவின் எட்டுப் பிள்ளைகளில் மூன்றாவதாக, பேர்சி மகிந்த ராஜபக்ச 1945 நவம்பர் 18ம் நாள் வீரகெட்டியவில் பிறந்தார்.
காலி றிச்மன்ட் கல்லூரியிலும், பின்னர் கொழும்பு நாலந்தா மற்றும் தேஸ்டன் கல்லூரிகளிலும் கல்வி கற்ற போதும் அவர் கபொத உயர்தரக் கல்வியைப் பூர்த்தி செய்யவில்லை.
இருந்தபோதும் சிறி ஜெயவர்த்தனபுர பல்கலைக்கழக நூலகத்தில் எழுதுனராக பணியாற்றிய அவர், 1970ம் ஆண்டு தனது தந்தையாரின் மறைவுக்குப் பின், அரசியலில் இறங்கி அவரது நாடாளுமன்றத் தொகுதியில் வெற்றி பெற்றார்.
நாடாளுமன்ற உறுப்பினர்கள் சட்டக்கல்லூரிக்கு அனுமதி பெறுவதற்கு குறைந்தபட்சக் கல்வித் தகைமை தேவையில்லை என்று அப்போதைய சட்ட அமைச்சர் கொண்டு வந்த நடைமுறையின் அடிப்படையில், மகிந்த ராஜபக்ச கொழும்பு சட்டக் கல்லூரியில் இணைந்து கொண்டார்.
1974இல் அவர் சட்டக் கல்லூரியில் பட்டம் பெற்றதாகவும் அமெரிக்கத் தூதுவர் மேலும் குறிப்பிட்டுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக