29 ஜனவரி 2012

சவேந்திரவின் நியமனம் குறித்து பான் கீ மூன் பொறுப்புக் கூறமாட்டார்!

ஐக்கிய நாடுகள் சபைக்கான இலங்கையின் பிரதி நிரந்தர வதிவிடப் பிரதிநிதி மேஜர் ஜெனரல் சவேந்திர சில்வாவின் புதிய நியமனத்தை ஐக்கிய நாடுகள் சபை ஏற்றுக் கொள்ளும் என தெரியவருகிறது. ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் பான் கீ மூனுடைய சிரேஸ்ட ஆலோசகர் குழுவில் சவேந்திர சில்வாவும் நியமிக்கப்பட்டுள்ளார்.
இது குறித்து இன்னர் சிட்டி பிரஸ்டு ஐக்கிய நாடுகள் சபையிடம் கேள்வி எழுப்பியுள்ளது.
இதற்கு பதிலளித்துள்ள ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தின் பேச்சாளர், "சவேந்திர சில்வாவின் நியமனம் குறித்து பான் கீ மூன் பொறுப்புக் கூற மாட்டார். அதேவேளை, அவருடைய நியமனத்தை தடுக்கும் வகையில் செயற்படவும் மட்டார்." எனக் குறிப்பிட்டுள்ளார்.
ஆகவே சவேந்திர சில்வா ஐக்கிய நாடுகள் சபையின் அமைதி காக்கும் படைப் பிரிவின் பான் கீ மூனுடைய சிரேஸ்ட ஆலோசகர் குழுவில் உள்ளடங்குவது உறுதிப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவருகிறது.
இலங்கையில் இடம்பெற்ற இறுதிக் கட்ட யுத்தத்தின் போது சவேந்திர சில்வா 58வது படை பிரிவின் கட்டளையிடும் தளபதியாக செயற்பட்டு விடுதலை புலிகளை வீழ்த்த முக்கிய பங்குவகித்துள்ளார்.
இலங்கையின் இறுதிக் கட்ட யுத்தம் குறித்து ஆராய்ந்து ஐநா நிபுணர் குழு வெளியிட்டுள்ள அறிக்கையில் சவேந்திர சில்வா தொடர்பில் தெரிவிக்கப்பட்டுள்ளதுடன், சவேந்திர சில்வா போர் குற்றவாளி எனத் தெரிவித்து அமெரிக்காவில் வழக்கும் தாக்கல் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக