
முதல் தடவையாக இலங்கையர் ஒருவர் இந்தப் பதவிக்காக நியமிக்கப்பட்டுள்ளார். சவேந்திர சில்வா ஆசிய பசுபிக் பிராந்திய வலய நாடுகளின் பிரதிநிதியாக நியமிக்கப்பட்டுள்ளார். முன்னாள் கனேடிய பாதுகாப்பு பிரதி அமைச்சர் லுயிஸ் பெர்ச்டெய், முன்னாள் அமெரிக்க துணை பாதுகாப்புச் செயலாளர் ஜேம்ஸ் டொப்பின்ஸ் உள்ளிட்ட முக்கியஸ்தர்கள் இந்தப் பிரதிநிதிகள் குழுவில் அங்கம் வகிக்கின்றனர்.
ஐக்கிய நாடுகள் அமைதி காக்கும் படையின் ஆலோசனைக் குழுவின் முதல் கூட்டத் தொடர் இந்த மாதம் நடைபெறவுள்ளதென்பது குறிப்பிடத்தக்கது.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக