15 ஜனவரி 2012

வலி,வடக்கு பிரதேச சபைத்தலைவரையும்,மக்களையும் தாக்கியது கடற்படை!

வலி.வடக்கு பிரதேச சபைத் தலைவர் சோ.சுகிர்தன் மீது சேந்தாங்குளம் பகுதியில் நேற்றிரவு 8.45 மணியளவில் கடற்படையினர் கண்மூடித்தனமாகத் தாக்குதல் நடத்தியுள்ளனர்.
சேந்தாங்குளம் பகுதியில் அண்மையில் மக்கள் மீள் குடியமர்த்தப்பட்ட இடங்களில் நீண்ட காலமாக சனநடமாட்டம் இன்மையால் பல இடங்களில் பற்றைகள் காடு போல மண்டியிருந்தன இதனால் டெங்கு முதலான நோய்கள் பரவும் அபாயம் எழுந்தது. இதனைக் கருத்தில் கொண்டு குறித்த பற்றைகளை அழிக்க முடிவு செய்யப்பட்டு, அது குறித்து பிரதேச சபைத்தலைவர் கடற்படையினருடனர் கலந்துரையாடி இருந்தார். இதற்கு கடற்படையினரும் அனுமதி அளித்திருந்தனர்.
எனவே குறித்த பற்றைகளை அப்பகுதி மக்கள் நேற்று எரியூட்டினர். இதன்போது அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் பற்றைகளை எரியூட்டியவர்களையும், சேந்தாங்குளம் கடலில் குளித்துக் கொண்டிருந்தவர்களையும் தாக்கினர்.அத்தோடு அவர்களை எரியும் பற்றைகளுக்கு தண்ணீர் ஊற்றி அணைக்குமாறும் கட்டளையிட்டனர்.
இது குறித்து அப்பகுதி மக்கள் பிரதேச சபைத்தலைவருக்கு தெரியப்படுத்தியதை அடுத்து, சம்பவ இடத்துக்கு அவர் இன்னும் சில பிரதேச சபை உறுப்பினர்களுடன் சென்றிருக்கிறார்.கடற்படையினரால் தாக்கப்பட்டவர்களுடன் அவர்கள் உரையாடிக்கொண்டிருந்த போது, திடீரென மீண்டும்அப்பகுதிக்கு வந்த கடற்படையினர் பிரதேச சபைத்தலைவர் மீது துப்பாக்கிப் பிடியால் தாக்கியதாக யாழ் செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக