19 ஜனவரி 2012

விடுதலைப் புலிகள் அமெரிக்க இராஜாங்க திணைக்களத்திற்கு எதிராக செயற்படுவதாக சிங்கள நாளிதழ் குற்றச்சாட்டு!

அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு எதிராக தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் வலையமைப்பு செயற்பட்டு வருவதாக திவயின ஊடகம் குற்றம் சுமத்தியுள்ளது.
அமெரிக்காவிற்கும், இலங்கைக்கும் இடையிலான இராஜதந்திர உறவுகளை வலுவிழக்கச் செய்ய புலிகள் வலையமைப்பு முயற்சித்து வருவதாக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது.
ஜனாதிபதி மஹிந்த ராஜபக்சவிற்கு இராஜதந்திர வரப்பிரசாதங்கள் இருப்பதனால் அவருக்கு எதிராக வழக்குத் தொடர முடியாது என அமெரிக்க ராஜாங்கத் திணைக்களம் அறிவித்திருந்தது.
அமெரிக்க ராஜாங்கத் திணைக்களத்திற்கு இந்த அறிவிப்பு பிழையானது என தமிழீழ விடுதலைப் புலிகளின் வலையமைப்பு சுட்டிக்காட்டியிருந்தது.
இது தொடர்பில் மேன்முறையீடு ஒன்றை செய்வதற்கு விடுதலைப் புலிகளின் சட்டத்தரணி புரூஸ் பின் என்பவர் முயற்சித்து வருவதாகத் தெரிவிக்கப்படுகிறது.
இந்த மேன்முறையீட்டை அமெரிக்க மாவட்ட நீதிமன்றமொன்று ஏற்றுக்கொண்டுள்ளமை விசேட அம்சமாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக