20 டிசம்பர் 2011

நல்லிணக்க ஆணைக்குழு(மகிந்த ஆணைக்குழு)அறிக்கை தொடர்பில் கவலையடைகிறோம்"என அமெரிக்கா தெரிவிப்பு.

அண்மையில் வெளிடப்பட்ட கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழுவின் இறுதி அறிக்கை குறித்து அமெரிக்கா தனது கவலையை தெரிவித்துள்ளதோடு, மனித உரிமை மீறல் குற்றச்சாட்டு மீது முழுமையான விசாரணை ஒன்றுக்கும் வலியுறுத்தியுள்ளது.
அரச படைகள் விடுதலைப் புலிகள் மீது தாக்குதல் நடத்தியபோது பொது மக்கள் மீதும் தாக்குதல் நடத்தப்பட்டதாக நல்லிணக்க ஆணைக்குழுவின் 400 பக்க அறிக்கை உறுதி செய்துள்ளதென அமெரிக்கா குறிப்பிட்டுள்ளது. ஊடக சுதந்திரம், மனித உரிமை மீறல் போன்ற விடயங்களில் கற்றுக் கொண்ட பாடங்கள் மற்றும் நல்லிணக்க ஆணைக்குழு நிலையான பரிந்துரைகளை செய்துள்ளதாக அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் தெரிவித்துள்ளார்.
"நாங்கள் முழு அறிக்கையையும் படித்து வருகிறோம். இறுதி யுத்தத்தில் இடம்பெற்ற உண்மையான மனித உரிமை மீறல் மற்றும் சம்பவங்கள் குறித்து அறிக்கையில் கூறப்பட்டுள்ள விதம் தொடர்பில் நாம் கவலையடைகிறோம்." என அவர் குறிப்பிட்டுள்ளார்.
அறிக்கையில் கூறப்பட்டுள்ள விடயங்கள் பூரணமானது என கருதாமல் அறிக்கையில் கூற தவறப்பட்ட விடயங்கள் குறித்தும் இலங்கை அரசு கவனம் செலுத்த வேண்டும் என அவர் வலியுறுத்தியுள்ளார். இலங்கை தம்மீதான குற்றச்சாட்டுக்களுக்கு தாமே பதிலளிப்பது சிறந்தது என அமெரிக்க அரச திணைக்கள பேச்சாளர் விக்டோரியா நுலான்ட் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக