18 டிசம்பர் 2011

ஒட்டுசுட்டான் ஆலய தீர்த்தக்கேணியில் குளித்த சிங்களவர் பலி!

முல்லைத்தீவு ஒட்டுசுட்டான் தான்தோன்றீஸ்வரர் கோவில் கேணியில் அத்துமீறி நீராடிய சிங்களவர் ஒருவர் இன்று அதிகாலை நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார்.
இந்தச் சம்பவம் குறித்து மேலும் தெரியவருவதாவது,
தென்னிலங்கையில் இருந்து வன்னிக்குச் செல்கின்ற சிங்களவர்கள் ஒட்டுசுட்டான் சிவன்கோவிலில் தங்கி கோவில் கேணியில் குளித்து கேணியினை அசிங்கப்படுத்திவந்திருக்கின்றனர். இது தொடர்பில் கோவில் நிர்வாகமும் ஊர் மக்களும் தொடர்ந்தும் வலியுறுத்தி வந்திருக்கின்ற போதிலும் எந்த நடவடிக்கையும் எடுக்கபடவில்லை. கோவில் வளாகத்தில் மாமிச உணவுகளை உட்கொள்வது, மதுபோதையில் நடமாடுவது போன்ற நடவடிக்கைகளை சிங்களவர்கள் தொடர்ந்து மேற்கொண்டே வருகின்றனர்.
இந்நிலையில் இவ்வாறு நேற்று இரவு அங்கு தங்கியிருந்த சிங்களவர்களில் ஒருவர் கோவில் கேணியில் குளிக்கச் சென்ற போது நீரில் மூழ்கி உயிரிழந்திருக்கின்றார். அவரது உடலம் முற்பகல் வரையில் மீட்கப்படவில்லை என்று அங்கிருந்து கிடைக்கும் தகவல்கள் தெரிவிக்கின்றன. அவரது சில உடைகளும், 30 ரூபா பணமும் மட்டுமே மீட்கப்பட்டிருப்பதாக தெரியவருகின்றது.
ஆலய கேணியில் ஊர் மக்கள் எவரும் நீராடுவது இல்லை என்பது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக