20 டிசம்பர் 2011

அனைத்துலக விசாரணைக்கு கூட்டமைப்பு கோரிக்கை,உலக ஊடகங்கள் முக்கியத்துவம்.

சிறிலங்கா அரசினால் வெளியிடப்பட்ட நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு நிராகரித்துள்ள விவகாரம் அனைத்துலக அளவில் கவனத்தை ஈர்த்துள்ளது.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையை நிராகரித்துள்ள தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு, போரின் இறுதிக்கட்டத்தில் இடம்பெற்ற போர்க்குற்றங்கள் தொடர்பாக அனைத்துலக விசாரணைகள் நடத்தப்பட வேண்டும் என்று அழைப்பு விடுத்துள்ளது.
இந்த அறிக்கைக்கு அனைத்துலக செய்தி முகவர் நிறுவனங்களும், ஊடகங்களும் முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
அமெரிக்க, அவுஸ்ரேலிய, ஐரோப்பிய, இந்திய ஊடகங்கள் பலவும், தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு இந்த அறிக்கையை நிராகரித்துள்ளது குறித்த செய்திகளையும் ஆய்வுகளையும் வெளியிட்டுள்ளன.
அத்துடன் உலகின் முன்னணி செய்தி முகவர் நிறுவனங்களும் இந்தச் செய்திக்கு முக்கியத்துவம் கொடுத்துள்ளன.
இதனால் இந்த விவகாரம் அனைத்துலக கவனத்தை அதிகளவில் ஈர்த்துள்ளது குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக