29 டிசம்பர் 2011

சிங்களவன் ரோலரில் மீன் பிடிக்கலாம் நாம் பிடிக்கக்கூடாதா?யாழில் தமிழ் மீனவர்கள் ஆவேசம்.

யாழ்,வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள் தங்களை றோலரில் மீன்பிடிக்க அனுமதிக்க வேண்டும் எனக் கோரி இன்று நண்பகல் யாழ் பிராந்திய நீரியல் வளத்துறை அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்.
சிங்களவனுக்கு ஒரு சட்டம் எங்களுக்கு ஒரு சட்டமா? நாங்கள் றோலரில் மீன்பிடிக்க கூடாது தென்பகுதி கடற்றொழிலாளர்கள் றோலரில் மீன்பிடிக்கலாம் என்கிறது உங்கட அரசாங்கம். எங்களை ஏன் இப்படிச் செய்கிறீர்கள்?என அலையலையாய் கொதித்து எழுந்தனர் வல்வெட்டித்துறை கடற்றொழிலாளர்கள்.
எங்கட றோலர் கடல் உபகரணங்களை எங்களின் அனுமதியின்றி ஏன் பறிமுதல் செய்தீர்கள்? எனவும் கேட்டு மீனவர்கள் கொதித்து எழுந்துனர். இந்த மீனவ்ரகளின் பிரச்சனையை அரசியலாக்கி அதில் அரசியல் இலாபம் தேட சில அரசியல்வாதிகள் முற்படுவதாக முன்னாள் நாடாளுமன்ற உறுப்பினர் சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.
கடல் தொழிலாளர்களில் அரசு கை வைக்குமானால் யாழ்.மாவட்ட செயலகத்தை முன்றுகையிட்டு தொடர் போராட்டங்களை நடத்துவோம் என கடற் றொழிலாளர்கள் எச்சரித்துள்ளனர்.
தங்களது கோரிக்கை அடங்கிய மகஜர் ஒன்றையும் யாழ்.பிராந்திய கடற்றொழில் நீரியல் துறை பணிப்பாளர் எஸ்.ரவீந்திரனிடம் ஒப்படைத்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக