08 டிசம்பர் 2011

முகாமை பார்வையிட ஜே.வி.பி மாற்றுக் குழுவுக்கு தடை.

சிறிலங்கா நாடாளுமன்ற உறுப்பினர் அஜித் குமார தலைமையில் ஜே.வி.பி. மாற்றுக்குழுவைச் சேர்ந்த அங்கத்தவர்கள் வவுனியா செட்டிக்குளத்திலுள்ள கதிர்காமர் நலன்புரி முகாமுக்குச் செல்ல முயன்றபோது பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக தெரிவிக்கப்படுகிறது.
ஜே.வி.பி. மாற்று அணியைச் சேர்ந்த அஜித் குமார எம்.பியுடன் அனைத்து பல்கலைக்கழக மாணவர் ஒன்றியத்தின் முன்னாள் ஏற்பாட்டாளர் உதுல் பிரேமரட்ன, ஜே.வி.பி.யின் யாழ் மாவட்ட அமைப்பாளர் லலித் குமார் வீரராஜூ ஆகியோரும் கதிர்காமர் நலன்புரி கிராமத்தில் தங்கியுள்ள இடம்பெயர்ந்த மக்களை சந்திக்கச் சென்றனர்.
எனினும் அவர்கள் பாதுகாப்பு அதிகாரிகளால் தடுக்கப்பட்டதாக அவ்வட்டாரங்கள் தெரிவித்தன. அம்மக்களை சந்திப்பதற்கு எவ்வித தடையும் இல்லை என மீள்குடியேற்ற அமைச்சர் உறுதியளித்த பின்னர் இவ்விஜயத்தை மேற்கொள்ள திட்டமிடப்பட்டதாகவும் ஆனால் இக்குழுவினர் நுழைவாயிலில் தடுக்கப்பட்டதாகவும் அவ்வட்டாரங்கள் தெரிவித்தன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக