15 டிசம்பர் 2011

யாரடா நீ?வெளியே போய் குப்பை கிடந்தால் பொறுக்கு"!

“யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” மேயரைப் பார்த்து உரையாற்றிய மங்கள நேசனால் சபை அல்லோல கல்லோசப்பட்டுள்ளது.
“நான் பேசும் போது யாரும் பேசக் கூடாது! யார் ஊழல் செய்தாலும் நான் அதை சுட்டிக் காட்டுவேன்” என ஆவேஷமாக யாழ் மாநகர சபை மேயரைப் பார்த்து காட்டமாக கடிந்து கொண்டார் ஈபிடிபி கட்சியில் இருந்து வெளியேற்றப்பட்ட மனுவல் மங்களநேசன்.
யாழ் மாநகர சபையின் 2012 ஆம் ஆண்டுக்கான வரவு செலவுத் திட்டத்திற்கான ஆலோசனைக் கூட்டம் இன்று புதன்கிழமை மாலை 3 மணிக்கு யாழ்.மாநகர சபை முதல்வர் தலமையில் யாழ் மாநகர சபை மாநாட்டு மண்டபத்தில் நடைபெற்றது.
யாழ் மாநகர சபையின் ஆளும் கட்சி உறுப்பினர் மனுவல் மங்களநேசன் முதல்வரை தரக் குறைவாக பேசியதாகவும் அவர் நடந்து கொண்ட விதம் குறித்து ஆளுங்கட்சி உறுப்பினர்களுக்கிடையே முரண்பாடும் மோதலும் வெடித்தது.
பிரதி மேயர் றீகன் மேயருடன் மரியாதையாக நடந்து கொள்ளவேண்டும் என்று மங்களநேசனிடம் கூறியதும் “நீ யாரடா? யார்? உனக்கு இங்கு என்ன வேலை வெளியில் குப்பை ஏதும் கிடந்தால் போய் பொறுக்கு” என்று கோவத்துடன் பேசினார் மனுவல் மங்கள நேசன்.
உங்களுக்கு பேசுவதற்கு உரிமையிருக்கிறது. ஆனால் மரியாதையாக பேச வேண்டும் என சபை உறுப்பினர்கள் கேட்டுக் கொண்டதும் அமைதியாகி தனது உரைமுடிந்ததும் உடனே சபையை விட்டு வெளியேறிச் சென்றார்.
இதேவேளை மங்களநேசன் சபையில் இருந்து வெளியேறியதுடன், தான் லெபனானில் ஆயுதப் பயிற்சி பெற்ற பலத்தை யாழ்.மாநகர சபையில் தான் அங்கம் வகித்த கட்சிக்கு எதிராகப் பயன்படுத்தி விட்டுச் சென்றுள்ளார்.
இருந்தும் மூன்று மொழி தெரிந்தவர் ஒரு மொழியிலேயே இவ்வாறு என்றால் மிகு இரண்டு மொழியும் பேசினால்...?
இதேவேளை தான் வகித்த கட்சிக்கு எதிராக இவ்வாறு துணிவுடன் சபையில் போராடிய மங்களநேசனைப் பார்த்து தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும் திருந்திக் கொள்ள வேண்டும்.
இல்லாவிடில் மங்களநேசனிடம் போய் கற்றுக் கொள்ள வேண்டும்.
நன்றி:tamilcnn

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக