18 டிசம்பர் 2011

இலங்கைக்கு எதிராக செயற்பட்டவர்களுக்கு சர்வதேச பொலிஸ் பிடிவிறாந்து பிறப்பித்துள்ளதாம்.

இலங்கைக்கு எதிராக செயற்பட்ட 70 பேருக்கு சர்வதேச பொலிஸார் பிடிவிராந்து உத்தரவு பிறப்பித்துள்ளனர் என திவயினபத்தரிகை செய்தி வெளியிட்டுள்ளது.இவர்களில் 29 பேர் பாரிய பயங்கரவாத சம்பவங்களுடன் தொடர்புடைய தமிழீழ விடுதலைப் புலி உறுப்பினர்கள் மற்றும் தலைவர்கள் எனத் தெரிவிக்கப்படுகிறது.
பல கோடி ரூபா வெட் வரி மோசடியில் ஈடுபட்ட கயிப் குதுப்தீனின் பெயரும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. கொழும்பு அரச சார்பற்ற நிறுவனமொன்றின் உப தலைவராக கடமையாற்றிய வேலுப்பிள்ளை ரேமன் என்பவருக்கு எதிராகவும் பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளது.
வர்த்தகத்தில் ஈடுபட்ட ஐந்து பெண்கள், இணைய தளமொன்றை நடத்திய நபர் ஒருவர் ஆகியோரது பெயர்களும் இதில் உள்ளடக்கப்பட்டுள்ளன. முதல் தடவையாக பாதாள உலகக் குழுவைச் சேர்ந்த ஒருவரின் பெயரையும் இதில் உள்ளடக்கியுள்ளதாக திவயின ஊடகம் செய்தி வெளியிட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக