19 டிசம்பர் 2011

அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை அமைக்க ஐ.நாவிடம் கோரிக்கை.

ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் , தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறை ஒன்றினை அமைக்குமாறு ஐ.நா செயலாளர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரியுள்ளது.
அமெரிக்காவில் இடம்பெற்ற நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றாவது பாராளுமன்ற கூட்டத் தொடரிலேயே இக்கோரிக்கை தீர்மானமாக நிறைவேற்றப்பட்டுள்ளது.
ஈழத் தமிழர் தயாகத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும் அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உணர்தி நிற்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் சபை செயலாளர் நாயகத்தை இத்தீர்மானம் கோரியுள்ளது.
மேலும்,சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகைள கிராம ரீதியாகக் கண்காணிப்பதற்காக உலகின் முக்கியமான நாடுகளில் கண்காணிப்புக்குழுக்களை அமைப்பது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
இதேவேளை 2012 ஆம் ஆண்டை சிறிலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாhகப் பிரிகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்றையும் நா.த.அரசாங்கத்தின் பாராளுமன்ற கூட்டத் தொடரில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது.
டிசம்பர் 14ம் திகதி முதல் 17 திகதி வரை இடம்பெற்ற பாராளுமன்ற கூட்டத் தொடர் அமர்வின் நிறைவுநாளில் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் ஆற்றிய உரையில்....
தமிழீழமே ஈழத் தமிழர் தேசத்தின் இலக்கு - அந்த இலக்கு நோக்கிய பயணத்தை நாம் உறுதியுடன் தொடருவோம் என்பதை எதிரிக்கும் உலகத்துக்கும் முரசறைந்து கூறக்கூடிய வகையில் நமது மூன்றாவது அமர்வு நிகழ்கள் நடைபெற்று நிறைவேறியிருக்கின்றன.
இந்தியாவிலிருந்தும் தென்னாபிரிக்காவிலிருந்தும் முதலாவது நியமன அரசவை உறுப்பினர்கள் இந்த அமர்வில் சத்தியப்பிரமாணம் செய்து அமர்வில் பங்கு கொண்டிருக்கிறார்கள்.
உலகளாவியரீதியில் தமிழர்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின்பின் அணிவகுக்க ஆரம்பித்துள்ளார்கள் என்பதற்கு இது ஒரு நல்ல எடுத்தக்காட்டு.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது வலுவினை அதிகரிக்கும் முயற்சியில் இது ஒரு முக்கியமான படிக்கட்டு.
ஆபிரிக்க தேசிய காங்கிரஸ் பிரதிநிதிகள்;, பிரித்தானிய பாராளுமன்ற உறுப்பினர்கள் மற்றும் அறிஞர்கள் நேரடியாகப் பங்கு பற்றி வழங்கிய கருத்துரைகள் , பிரித்தானிய அரசியற்தலைவர்களின் வாழ்த்துக்கள் போன்றவையும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தன்னைத் ஈழத் தமிழர் தேசத்தின் வலுமையமாக ஆக்கிக் கொள்வதற்கு வலுச் சேர்க்கக் கூடியவை.
இவையெல்வாம் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தனது மென்வலுவினைக் கம்பீரமாககப் பயன்படுத்தும் நிலைக்கு இட்டுச் செல்லத் துணைபுரியக்கூடியவை.
புதிதாய் அமைக்கப்பட்ட நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இனப்படுகொலை நிபுணர்குழு முதற்தடமையாகக்கூடித் தனது செயற்பாடுகளை ஆராய்ந்துள்ளது.
சிறிலங்கா அரசின் ஈழத் தமிழ் தேசத்தின் மீதான இனப்படுகொலையினை அனைத்துலக அரங்கிலும் உள்நாடுகளிலும் காத்திரமாக வெளிப்படுத்தக்கூடிய பல்வேறுவகையிலானன அணுகுமுறைகளை இந் நிபுணர்குழு ஆராய்ந்தது.
உள்நாடுகளில் கூடுதலான சட்டநடவடிக்கைககைளை மேற்கொள்வது குறித்தும் அனைத்துலக அரங்கில் மக்கள் நீதிமன்றங்களை அமைத்து சிறலங்கா அரசின் இனப்படுகொலை குறித்த விசாரணைகளை மேற்கொள்வது குறித்தும் ஆராயப்பட்டன.
2012 ஆம் ஆண்டு மனித உரிமை ஆணைக்குழவில் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் செயற்படவேண்டிய முறை குறித்து ஆராய்வதற்காக ஒரு விசேட மூலோபாயச் சந்திப்பும் மேற்கொள்ளப்பட்டது.
நள்ளிரவுவரை நீடித்த இந்தச் சந்திப்பில் உறுப்பினர்கள் காட்டிய உற்சாகம் மிகுந்த நம்பிக்கையினைத் தந்தது.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திக் போரட்டப்பாதை குறித்து சமர்பிக்கப்பட்ட ஆவணம் குறித்தும் நாம் விவாதித்தோம்.
இது குறித்த விவாதங்களைத் தொடரந்து மேற்கொண்டு நாம் பயணிக்க வேண்டிய திசையினை தெளிவாக வரையறுத்துக் கொள்வதற்கு இந்த அமர்வு வழிகோலியுள்ளது.
அறிஞர்களும் செயற்பாட்டார்களும் இந்த அமர்வில் முன்வைத்த கருத்துக்கள் நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்கு உறுதுணை செய்யக்கூடியவையாக அமைந்தன. புத்தாக்கச் சிந்தனைகளுக்கு களம் அமைப்பவையாகவும் அமைந்தன.
முஸ்லீம் சகோதரர்களுக்கும் சகோதரர்களுக்குமான அரசியல் உறவுகள் தொடர்பான உரையாடல் இங்கே ஆரம்பமானது.
தமிழீழத் தாயகத்தில் சிங்களத்தின் இன அழிப்புக்கெதிராக அனைத்துலக பாதுகாப்புப் பொறிமுறை ஒன்றினை உருவாக்குவது தொடர்பான ஆவணம் மீதும் சபை விவாத்தித்தது.
ஈழத் தமிழர்தயாககத்தில் சிறிலங்கா அரசால் மேற்கொள்ளப்படும்; அமைப்பியல் இனப்படுகொலை, குடியயேற்றங்கள், இராணுவ ஆக்கிரமிப்பு, சட்டத்துக்குப் புறப்பான கடத்தல்கள் மற்றும் கொலைகள், பாலியல்ரீதியான துன்புறுத்தல்கள் - இவையல்லாம் அனைததுலக பாதுகாப்பு பொறிமுறையின் அவசியத்தை உணர்தி நிற்கின்றது. இதனைக் கருத்தில் கொண்டு உடனடியாக ஈழத்தில் தமிழ் மக்களின் பாதுகாப்பிற்காகவும் தமிழ் இனத்தின் அடையாளத்தைப் பேணுவதற்காகவும் அனைத்துலக பாதுகாப்பு பொறிமுறையினை அமைக்குமாறு ஐக்கியநாடு சபை செயலாழர் நாயகத்தை நாடுகடந்த தமிழீழ அரசாங்கம் கோரிநிற்கின்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.
இதன் அடிப்படையில் இத்தகையதொரு அனைத்துலகப் பாதுகாகப்புப் பொறிமுiயினை அமைக்குமாறு ஐக்கிய நாடுகள் செயலாளர் நாயகத்தை நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் கோருகிறது.
மேலும்,சிறிலங்கா அரசின் இனப்படுகொலை நடவடிக்கைகைள கிராமரீதியாகக் கண்காணிப்பதற்காக உலகின் முக்கியமான நாடுகளில் கண்காணிப்புக்குழுக்களை அமைப்புது எனவும் நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் தீர்மானித்துள்ளது.
சிறிலங்கா அரசு தமிழர் தாயகத்தில் மேற்கொள்ளும் குடியேற்றங்கள் தொடர்பாகவும் நாம் இச் சபையில் விவாதித்திருந்தோம்.
2012 ஆம் ஆண்டை சிறிலங்கா அரசின் மீதான அனைத்துலக விசாரணைக்குரிய ஆண்டாhகப் பிரிகடனப்படுத்தும் தீர்மானம் ஒன்றையும் நாம் இச்சபையில் நிறைவேற்றியுள்ளோம்.
இப்படியாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் இந்த மூன்றாவது அமர்வு தமிழீழ விடுதலைப் போராட்டத்தின் அடுத்த கட்டத்தை நோக்கி நாம் முன்னேறுவதற்கு உதுணையாகப் பல்வேறு விடயங்களை விவாதித்திருந்தது.
ஈழத் தமிழர் தேசத்தின் அடுத்த கட்ட விடுதலைப் போராட்டத்தில் 2012 ஆம் ஆண்டு தீரக்கமான பாத்திரத்தை வகிக்கப் போகிறது எனவும் - இவ் ஆண்டு சிறிலங்கா அரசுக்கும் ஈழத் தமிழர் தேசத்துக்கும் சவால் மிக்கதொரு ஆண்டாக அமையும் எனவும் - இந்த ஆண்டில் எவர் முன்னோக்கி ஒடுகிறார்களோ அவர்களே அடுத்த கட்ட வெற்றியைத் தமதாக்கிக் கொள்ளும் வாய்ப்புக்கள் அதிகம் உள்ளன எனவும் நான் எனது மூன்hவது அமர்வுக்கான ஆரம்ப உரையில் தெரிவித்திருந்தேன்.
நடைபெற்று முடிந்த மூன்றாம் அமர்வு நிகழ்வுகள் 2012 ஆம் ஆண்டு ஈழத் தமிழர் தேசத்தின் ஆண்டாகவே அமையப் போகிறது என்பதனை எமக்கு உள்ளுணர்த்தி நிற்கின்றன.
2012ம் ஆண்டை நமது ஆண்டாக வென்றெடுக்க அனைவரும் திடசங்கற்பம் பூண்டு உழைப்போமாக என பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள் தனதுரையில் தெரிவித்தார்.
இதேவேளை அமர்வில் உணர்வுபூர்வ நிகழ்வாக பார்வையாளராக கலந்து கொண்ட தாயொருவர் தமிழீழக் கொடியேற தன் (தாலி) கொடியை தமிழீழ அரசாங்கத்துக்கு வழங்கிய உணர்வுபூர்வ நிகழ்வு குறித்து குறிப்புரைத் பிரதமர் வி.உருத்திரகுமாரன் அவர்கள்....
தாயகத்தில் எமது தாய்மார்களினதும் சகோதிரிகளினதும் கழுத்துக்களில் தொங்கும் தாலிகள் நிலைத்து நிற்க வேண்டும் என்பதற்காக இங்கு ஒரு தாலிக்கொடி இறங்கியது. ஈழத் தமிழர் தேசம் தனக்கெனச் சுதந்திரமான இறைமையுடைய தமிழீழத் தனியரசினை அமைத்து, தமிழீழத் திருநாட்டின் தேசியக் கொடி உலக அரங்கில் பட்டொளி வீசப் பறக்க வேண்டும் என்பதற்காக - இந்த அமர்வில் நமது தேசத்தின் தாய் ஒருவர் தனது கழுத்திலிருந்த தனது தாலிக்கொடியினை தானே இறக்கி - நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்திடம் ஒப்படைத்த நிகழ்வை நாம் இந்த அரங்கில் கண்டோம்.
இது நம் எல்லோர் நெஞ்சையும் நிகழச் செய்தது. நமது கண்களில் கண்ணீரை வரவழைத்தது.
இந்தத் தாய் நமது மக்களின் விடுதலை உணர்வின் குறியீடு.
தேசியத்தலைவரின் தiமையில் தமிழீழ மண்ணிலே தமிழீழ நடைமுறை அரசு அமைக்கப்பட்டு, விடுதலைப் போராட்டம் வீச்சாக நடைபெற்றுக் கொண்டிருந்த காலத்தில் இத்தகைய நிகழ்வுகளை நாம் கண்டிருக்கிறோம். அந்த உணர்வுகளுக்கு சற்றும் குறையாத வகையில் தமிழ் மக்களின் அர்பணிப்பு உணர்வைததான் இந்தத்தாயின் வடிவில் நாம் இந்தச் சபையில் கண்டோம்.
இதனைத் தொடர்து இங்கு கூடியிருந்தோர் பலரும் தம்மிடம் இருந்த தங்கச் சங்கிலிகளையும் பணத்தையும: பங்களிப்பாக நாடு கடந்த தமிழீழ அரசாங்கத்தின் செயற்பாடுகளுக்களாக வழங்கியமையும் நாம் கண்டோம்.
நாடு கடந்த தமிழீழ அரசாங்கம் வெற்றிகரமாக தனது இலக்கு நோக்கிய பயணத்தைத் தொடர வேண்டும் என்பதில் அனைவரும் கொண்டிருக்கும் பற்றுதியை இவை வெளிப்படுத்தி நிற்கின்றன என பிரதமர் அவர்கள் தெரிவித்தார்.

- நாதம் ஊடகசேவை -

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக