27 டிசம்பர் 2011

ஸ்ரீலங்காவிற்கு எதிராக ஐ.நா.மனித உரிமை பேரவையில் தீர்மானம்?

ஜெனிவாவில் அடுத்த ஆண்டு மார்ச் மாதம் நடைபெறவுள்ள ஐ.நா மனிதஉரிமைகள் பேவையின் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான- கடுந்தொனியிலான தீர்மானம் ஒன்றைக் கொண்டு வரும் முயற்சியில் மேற்கு நாடுகள் இறங்கியிருப்பதாக கொழும்பு ஆங்கில ஊடகம் ஒன்று தகவல் வெளியிட்டுள்ளது.
கடுமையான சொற்களில் அமைந்த இந்தத் தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் ஈடுபட்டுள்ள மேற்கு நாடுகள், இதுபற்றி முன்னணி ஆசிய நாடுகளுடன் இராஜதந்திர ரீதியிலான ஆலோசனைகளில் ஈடுபட்டுள்ளன.
நல்லிணக்க ஆணைக்குழுவின் அறிக்கையில் காணப்படும் மயக்க நிலை குறித்தும் மேற்கு நாடுகள் இராஜத்தந்திர ரீதியில் கலந்துரையாடியுள்ளன.
ஜெனிவாவில் மார்ச் மாதம் ஐ.நா மனிதஉரிமைகள் பேரவைக் கூட்டத்தொடரில் சிறிலங்காவுக்கு எதிரான தீர்மானத்தைக் கொண்டு வரும் முயற்சியில் அனைத்துலக அரசசார்பற்ற நிறுவனங்களும், மேற்கு நாடுகளும் தீவிரமாக ஈடுபட்டுள்ள நிலையில், 2012ம் ஆண்டு சிறிலங்காவுக்கு “தீயணைப்பு ஆண்டு“ ஆகவே அமையும் என்று கொழும்பிலுள்ள இராஜதந்திரி ஒருவர் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக