06 டிசம்பர் 2011

மகிந்த-சம்பந்தன் தொலைபேசியில் உரையாடினர்,மீண்டும் இன்று பேச்சுவார்த்தைக்கு இணக்கம்.

இனப்பிரச்சினை தொடர்பான 16வது சுற்றுப் பேச்சுவார்த்தைக்கு அரசாங்கம் தமிழ்த் தேசியக் கூட்டமைப்புக்கு அழைப்பு விடுத்துள்ளது. இதன்படி ஏற்கனவே திட்டமிட்டது போல் இன்றைய தினம் (06) செவ்வாய்கிழமை இந்த சந்திப்பு இடம்பெறவுள்ளது.
இன்று மாலை பாராளுமன்ற கட்டடத் தொகுதியில் நடைபெறவுள்ள இச்சந்திப்பில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு கலந்து கொள்ளும் என அதன் ஊடாகப் பேச்சாளர் சுரேஸ் பிரேமச்சந்திரன் தெரிவித்தார்.
ஏற்கனவே 15ம் சுற்றுப் பேச்சுவார்த்தையில் அரசாங்கம் முன்பு வழங்கிய உறுதி மொழிகளை நிறைவேற்றாது பேச்சுவார்த்தையை முறித்துக் கொண்டதாக கூட்டமைப்பு அறிவித்த நிலையில் இன்று மீண்டும் சந்திப்புக்கு அழைப்பு விடுக்கப்பட்டுள்ளது.
தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பேச்சுவார்த்தைக் குழுவின் தலைவர் சம்பந்தனுடன் மகிந்த தொலைபேசி மூலம் உரையாடியதாகவும் அதன் பின்னர் பேச்சுவார்த்தையில் கூட்டமைப்பிற்கும் அரசிற்குமிடையான சிக்கல் சீர்செய்யப்பட்டதாகவும் தெரியவருகிறது. மகிந்த-சம்பந்தன் தொலைபேசி உரையாடலில் என்ன உறுதிமொழிகள் வழங்கப்பட்டது தொடர்பான விடயங்கள் தெரியவரவில்லை.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக