25 டிசம்பர் 2011

பேச்சுக்களிலிருந்து விலகமாட்டோம் என சம்பந்தர் பி.பி.சி.க்கு தெரிவித்தார்.

சிவில் சமூகம் கூட்டமைப்பிற்கு விடுத்த வேண்டுகோள்கள் தொடர்பாக சம்பந்தன் நேற்று மன்னார் ஆயர் இராயப்பு யோசப் அவர்களிற்கு அனுப்பி வைத்தது தொடர்பில் பிபிசி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் சம்பந்தனிடம் தொடர்பு கொண்டு கேட்டிருந்தது.
சிவில் சமூகத்தால் முன்வைக்கப்பட்ட சுயநிர்ணயம் தேசியம் தொடர்பாக கேட்டபோது, அவை வெறும் கோசங்கள் என்ற சாரப்பட பதிலளித்த சம்பந்தன், அரசாங்கம் காணி பொலிஸ் அதிகாரங்களை தரமாட்டாது என அறிவித்த நிலையில் பேச்சுக்கள் எவ்வாறு தொடரப்பட இருக்கின்றது என கேட்டபோது, பேச்சுவார்த்தையில் அரச தரப்புக் குழு அவ்வாறு ஒன்றும் சொல்லவில்லை எனவும் வெறும் அமைச்சர்கள் கூறுவதை பொருட்படுத்த தேவை இல்லை எனவும் தெரிவித்தார். அதேவேளை நாம் பேச்சுக்களிலிருந்து ஒருபோதும் விலகமாட்டோம் எனவும் தெரிவித்தார்.
இவ்வாறு சம்பந்தன் தெரிவித்தாலும், மகிந்த ராஜபச்சே பத்திரிகையாளர் மாநாட்டில் பொலிஸ் காணி அதிகாரங்கள் வழங்கப்படமாட்டாது என தெரிவித்திருந்தது இங்கு குறிப்பிடத்தக்கதாகும்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக