23 டிசம்பர் 2011

போர்க் குற்றங்களுக்கு பொறுப்பானவர்களை நீதியின் முன் நிறுத்துவோம்.

தமிழ் மக்களுக்கான பிரித்தானியாவின் அனைத்து பாராளுமன்றக் குழு தலைவர் Lee Scott (லீ ஸ்கொட்) அவர்கள் ஈழவிடுதலைப் போராட்டத்தில், உயிர் இழந்தவர்களுக்கும்,இன்று வரை இலங்கையில் வேதனைகளை அனுபவித்து கொண்டிருக்கும் தமிழ் மக்களும், நீதியைப் பெறும் முயற்சியில் நாம் ஈடுபட்டுள்ளோம் என தெரிவித்துள்ளார்.
நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மூன்றவாவது பாராளுமன்ற அமர்விற்கு அனுப்பிவைத்த வாழ்த்துச் செய்தியிலேயே Lee Scott அவர்கள் இக்கூற்றினை தெரிவித்துள்ளார்.
போர்குற்றங்களுக்கு பொறுப்புக் கூறவேண்டியவர்களை சர்வதேச விசாரணை கூண்டில் முன் நிறுத்துவதற்கான முயற்சியில் தனது சகாக்களையும் அழைத்துளேன் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இதேவேளை பிரித்தானியாவின் மிச்சம், மோடன் பகுதி பாராளுமன்ற உறுப்பினர் Siobhain McDonagh (ஷிபொன் மக்டோனா) அவர்கள் அனுப்பி வைத்த வாழ்த்துச் செய்தியில் எதிர் வரும் ஐ.நாவின் மனித உரிமைகள் சபையில், துறைசார் தகமையுடன் பரப்புரைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என குறிப்பிட்டுள்ளார்.
எதிர்வரும் மார்ச் மாதம் கூடவுள்ள ஐ.நாவின் மனித உரிமைக் கூட்டத் தொடரில் அனைவரும் ஓருங்கிணைநத்து செயற்பட வேண்டுமென வலியுறுத்தியுள்ள ஷிபொன் மக்டோனா அவர்கள் போர் குற்ற விசாரணை தொடர்பில் கிடைக்கபெறும் இந்த சந்தர்பத்தை பயன்படுத்த அனைவரும் பாடுபடவேண்டும் Siobhain McDonagh கேட்டுக் கொண்டுள்ளார்.
இந்த ஒருங்கிணைந்த பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்தின் மனித உரிமைகளுக்கான செயற்பாட்டில் தானும் இணைந்திருப்பதையும் குறிப்பிட்டுள்ள Siobhain McDonagh அவர்கள் அனைத்து புலம் பெயர்ந்த தமிழ் மக்களும், உண்மையாக ஒருங்கிணைந்து அழுத்தத்தை கொடுக்க வேண்டிக் கொள்வதாக குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை உலகெங்கும் வாழும் தமிழ் மக்களை ஒருங்கிணைக்கும் பணியில் ஈடுபட்டிருக்கும் நாடுகடந்த தமிழீழ அரசாங்கத்துக்கு தனது பாராட்டுதல்களையும் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக