03 டிசம்பர் 2011

கே.பி.க்கு ஆப்பிறுக்கும் ஜெயலத் ஜெயவர்த்தன.

தமிழீழ விடுதலைப் புலிகளின் முன்னாள் சர்வதேச விவகாரப் பொறுப்பாளர் குமரன் பத்மநாதன் எனப்படும் கே.பி.க்கு எதிராக சர்வதேச பிடிவிராந்து பிறப்பிக்கப்பட்டுள்ளதாக ஐக்கிய தேசியக் கட்சியின் பாராளுமன்ற உறுப்பினர் ஜயலத் ஜயவர்தன தெரிவித்துள்ளார்.
ஆயுத பயன்பாடு, பயங்கரவாதம், வெடிபொருட்கள் பயன்பாடு மற்றும் ஏனைய குற்றச் செயல்களில் ஈடுபட்டதாக குமரன் பத்மநாதனுக்கு எதிராக குற்றம் சுமத்தப்பட்டுள்ளது என அவர் குறிப்பிட்டுள்ளார். இது தொடர்பான ஆவணமொன்றை ஜயலத் ஜயவர்தன பாராளுமன்றில் நேற்று சமர்ப்பித்துள்ளார்.
இன்டர்போலினால் பிறப்பிக்கப்பட்டுள்ள பிடிவிராந்தின் பிரதி ஒன்றையும் அவர் பாராளுமன்றில் சமர்ப்பித்துள்ளார். 2009ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் குமரன் பத்மநாதனை இலங்கை அதிகாரிகள் மலேஷியாவில் வைத்து கைது செய்திருந்தனர்.
அரசாங்கத்தின் கட்டுப்பாட்டில் இருக்கும் குமரன் பத்மநாதன் நீடோ என்னும் தன்னார்வ தொண்டு நிறுவனமொன்றை நடத்தி வருகின்றார். யுத்தத்தினால் பாதிக்கப்பட்ட சிறுவர் சிறுமியருக்கு நலன்களை வழங்கும் நோக்கில் இந்த நிறுவனம் ஆரம்பிக்கப்பட்டதாகக் குறிப்பிடப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக