01 டிசம்பர் 2011

அரியாலையில் புதிய படைமுகாம் அமைக்கப்படுகிறது!

அரியாலை கிழக்கு போக்கறம்பைக்குளம் பிள்ளையார் கோயிலை அண்டிய பகுதிகள் இராணுவத்தினர் பாரிய முகாம் ஒன்றை அமைக்கும் திட்டம் ஒன்றை மேற்கொண்டு வருகின்றனர்.
இப்பகுதியில் இவ்வருட ஆரம்பத்தில் மீள்குடியேற்றம் செய்யப்பட்டது. மக்கள் படிப்படியாக மீள் குடியேறி தங்களது இயல்பு நிலைக்கு மாறிவரும் நிலையில், நேற்று முன்தினம் அப்பகுதிக்கு வந்த இராணுவக் குழு, எந்தவித அனுமதியுமின்றி மக்களின் காணிகளை வலுக்கட்டாயமாகப் பிடித்து எல்லைகளை அடையாளமிட்டு வருகின்றனர். மேலும் இராணுவ வேலிகள் அடைப்பதற்கு பனைமரங்கள், மற்றும் காட்டுமரங்களை வெட்டிக் கொண்டுவந்து சேர்த்துள்ளனர்.
படையினரின் இந்த நடவடிக்கையினால் மக்கள் அச்சமடைந்துள்ளதுடன் இப்பகுதியில் தொடர்ந்தும் வாழ முடியுமா என்ற சந்தேகத்தில் இருப்பதாகத் தெரிவிக்கின்றனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக