13 டிசம்பர் 2011

நோபல் பரிசின் மகிமை புரியாத அஸ்வர்!

சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று சிறிலங்கா நாடாளுமன்றத்தில் கூறியுள்ளார் ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திர முன்னணியின் உறுப்பினரான ஏ.எச்.எம்.அஸ்வர்.
தீவிரவாதத்தை முற்றாக அழித்து நாட்டில் அமைதியை ஏற்படுத்தியதற்காகவே சிறிலங்கா அதிபர் மகிந்த ராஜபக்சவுக்கு நோபல் சமாதானப் பரிசு வழங்கப்பட வேண்டும் என்று அவர் கோரியுள்ளார்.
முப்பதாண்டு கால தீவிரவாதத்தினால் கொலைகளும் இரத்தக்களரியும் வழக்கமாக இருந்தது. தினமும் பொதுமக்கள் கொல்லப்பட்டனர்.
தீவிரவாதத்தை தோற்கடிப்பதில் உலகில் எந்தவொரு தலைவராலும் சாதிக்க முடியாததை மகிந்த ராஜபக்ச சாதித்துள்ளார்.“ என்றும் அஸ்வர் மேலும் கூறியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக