17 ஜூலை 2012

தமிழக அகதிகள் முகாமில் 6 வயதான சிறுமி வல்லுறவுக்குட்படுத்தப்பட்டு கொலை!

தமிழகத்தின் நாமக்கல் மாவட்டத்திலுள்ள மேட்டுப்பட்டி இலங்கை அகதிகள் முகாமில் 6 வயதான சிறுமியொருத்தி, பாலியல் வல்லுறவுக்குட்பட்டு கொலைசெய்யப்பட்டமை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதனால் அம்முகாமில் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.
சிரிஜா அல்லது ஸ்ரீநிதி எனும் இச்சிறுமியின் உடல், மேற்படி முகாமிலிருந்து 3 கிலோமீற்றர் தொலைவிலுள்ள மதகு ஒன்றின் கீழிருந்து நேற்று மீட்கப்பட்டது. இச்சிறுமியின் கழுத்திலும் கைகளிலும் வெட்டுக்காயங்கள் காணப்பட்டன. இச்சிறுமி வேறு இடத்தில் கொலை செய்யப்பட்டு இப்பாலத்தின் கீழ் சடலம் போடப்பட்டிருக்கலாம் என பொலிஸார் கூறுகின்றனர்.
இச்சம்பவம் தொடர்பாக மேற்படி அகதிகள் முகாமைச் சேர்ந்த கண்ணன் (27) என்பவர் கைது செய்யப்பட்டள்ளார். பாலியல் பலாத்காரம் செய்து சிறுமியை கொன்றதாக அவர் ஒப்புக்கொண்டுள்ளார் என தினமலர் பத்திரிகை தெரிவித்துள்ளது.
20 வருடகாலமாக இயங்கும் இந்த அகதிகள் முகாமில் இத்தகையதொரு சம்பவம் நடைபெற்றமை இதுவே முதல்தடவை எனக்கூறப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக