10 ஜூலை 2012

ஒரு சில படையினர் குற்றம் புரிந்திருக்கக்கூடும் என்கிறார் கோத்தபாய!

குற்றச் செயல்களில் ஈடுபடும் படையினர் தண்டனைகளிலிருந்து தப்பிக்க முடியாது என கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
யுத்தம் இடம்பெற்ற காலப்பகுதியில் ஒருசில படைவீரர்கள் உத்தரவுகளை மீறிக் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருக்கக் கூடும் என கோதபாய தெரிவித்துள்ளார்.
படைவீரர்கள் குற்றச் செயல்களில் ஈடுபட்டிருந்தால் இராணுவ சட்டங்களுக்கு அமைய கடுமையான தண்டனை விதிக்கப்படும் எனவும், கடந்த காலங்களைப் போன்றே எதிர்காலத்திலும் குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தப்பிக்க வாய்ப்பில்லை.
குற்றச் செயல்களில் ஈடுபடும் படைவீரர்களுக்கு தண்டனை விதிப்பது தொடர்பில் ஏற்றுக்கொள்ளப்பட்ட விசேட பொறிமுறைமையொன்று காணப்படுவதாகவும், அந்தப் பொறிமுறையின் கீழ் நடவடிக்கை எடுக்கப்படும் எனவும் குறிப்பிட்டார்.
உண்மையைக் கண்டறியும் ஆணைக்குழு இறுதி அறிக்கை வெளியிடப்பட்டதனைத் தொடர்ந்து படையினர் குற்றச் செயல்களில் ஈடுபட்டார்களா என்பது பற்றி விசாரணை செய்ய இராணுவ நீதிமன்றங்கள் அமைக்கப்பட்டுள்ளதாகவும்
தனிப்பட்ட நபர்கள் அல்லது குழு தொடர்பில் உரிய ஆதாரங்கள் இருந்தால் அது தொடர்பான குற்றச்சாட்டுக்களை முன்வைக்க முடியும் எனவும் அவர் தெரிவித்துள்ளார்.
இறுதிக் கட்ட யுத்தத்தின் போது உயிரிழந்தவர்கள் பற்றிய புள்ளி விபரங்கள் திரிபுபடுத்தப்பட்டு வெளியிடப்பட்டுள்ளதாகக் குறிப்பிட்ட கோதபாய
இராணுவமும் அரசாங்கமும் பொதுமக்களை பாதுகாப்பத்தில் கூடுதல் சிரத்தை காட்டிய போதிலும், யுத்தத்தின் போது ஓரளவு பொதுக்கள் இழப்புக்களை தவிர்க்க முடியாது எனவும் தெரிவித்தார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் பலவந்தமான முறையில் படையினரை இணைத்துக் கொண்டதுடன், பொதுமக்களை மனித கேடயமாக பயன்படுத்திக் கொண்டதாக கோதபாய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக