02 ஜூலை 2012

ஜேர்மனியில் 'தமிழீழ இறைமைக்கான மாநாடு'

திட்டமிட்ட இன அழிப்பினை உடனடியாக நிறுத்துவதற்கும், ஈழத் தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்க கோரியும் ஜேர்மனில் தமிழ் இளையோர் அமைப்பினரால் தமிழீழ இறைமைக்கான இரண்டாவது மாநாடு நடத்தப்படவுள்ளது.
விடுதலை உணர்வுடன் செயற்பட்டுவரும் தமிழ் இளையோர்களின் ஒருங்கிணைப்பின் கீழ் நடைபெறும் தமிழீழ இறைமைக்கான மாநாடு. ஈழத் தமிழர்களின் வரலாற்று வழிவந்த இறைமை மற்றும் அவர்கள் போராடிப்பெற்ற இறைமை ஆகியவற்றுடன், அவர்களை அழிவில் இருந்து காக்க வழங்கப்பட வேண்டிய இறைமை ஆகியவற்றை அடிப்படையாக கொண்டு,
சர்வதேச நாடுகள் 60 ஆண்டுகளுக்கு மேலாக சிங்கள அரசின் திட்டமிட்ட இனவழிப்பினை உடனடியாக நிறுத்துவதற்கு ஈழத் தமிழர்களின் இறைமையை அங்கிகரிக்க வேண்டும் என்று இலங்கைத்தீவிலும், தமிழ்நாட்டிலும், புலம்பெயர்ந்த நாடுகளிலும் வாழும் ஒத்த சிந்தனையுடைய பலருடன், குறிப்பாக இளைய தலைமுறையினருடன் பரவலாக உரையாடி விவாதித்த பின்னர்,ஜேர்மனியில் நடைபெற்ற முதலாவது மநாட்டு அமர்வினை தொடர்ந்து எதிர்வரும் 15.07.2012 அன்று தமிழீழ இறைமைக்கான இரண்டாவது மாநாடு நடைபெறவுள்ளதாக ஜேர்மன் தமிழ் இளையோர் அமைப்பினர் அறிவித்துள்ளார்கள்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக