22 ஜூலை 2012

கிளைமோர் தாக்குதலில் தப்பித்த ஒட்டுக்குழு இனியபாரதி!

மட்டு-அம்பாறையில் நடாத்தப்பட்டுள்ள கிளைமோர் தாக்குதலில் இருந்து இனியபாரதி தப்பித்துள்ளதாக அங்கிருந்து செய்திகிடைத்துள்ளது.தமிழீழ விடுதலைப் புலிகள் அமைப்பின் கிழக்கு மாகாணத்தின் படைப்பிரிவின் முக்கிய நபர்களில் ஒருவராக விளங்கிய இனியபாரதி தமிழினத்தை காட்டிக்கொடுத்து இனத்துரோகமிழைத்து பிரிந்து சென்றார்.
மட்டு-அம்பாறை பகுதியில் தமிழகத்து பாணியில் கட்டைப் பஞ்சாயத்து முறையில் அடாவடித்தனம் செய்து வரும் இனியபாரதியை சிங்களப் பெண் ஒருவர் திருமணம் முடித்து சொத்துகளை சேர்த்துக் கொண்டு பிரிந்து போயிருந்த நிலையில் அண்மையில் பள்ளிக்கூட மாணவி ஒருவரை பலவந்தமாக கடத்திக் கொண்டுபோய் கட்டாய திருமணம் செய்துள்ள நிலையில் தற்போது அவரை இலக்குவைத்து கிளைமோர் தாக்குதல் நடாத்தப்பட்டுள்ளது.
அம்பாறையில் குறித்த ஒரு கோவிலுக்கு பஜரோ வாகனத்தில் இனியபாரதி சென்று வருவதை வாடிக்கையாக கொண்டுள்ளார். இந்நிலையில் அந்த கோயிலுக்கு அருகாமையில் மறைத்து வைக்கப்பட்டிருந்த கிளைமோர் வெடிகுண்டை இயக்கி தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது.
இந்த கிளைமோர் தாக்குதலில் பஜரோ வாகனம் ஒன்று சேதமடைந்துள்ளதுடன் அதில் வந்தவர்கள் கோயிலுக்கு முன்னதாக சென்றதால் உயிர்தப்பியுள்ளார்கள். இனியபாரதி வழக்கமாக கோயிலுக்கு வரும்போது பஜரோவை நிறுத்தும் இரண்டு இடங்களை நன்கு அவதானித்து அந்த இடங்களில் இரண்டு கிளைமோரை மறைத்து வைத்துள்ளனர். இவற்றில் ஒன்றே வெடித்துள்ளது.
இனியபாரதி பயன்படுத்தும் பஜரோ வாகனத்தை ஒத்த இன்னொரு பஜரோ வாகனத்தில் வந்த வேறு ஒருவர் மீதே தவறுதலாக தாக்குதல் நடத்தப்பட்டுள்ளது. உடனடியாக சம்பவ இடத்திற்கு வந்த சிறிலங்கா காவல்துறையினரும் இராணுவத்தினரம் அந்த சுற்றுவட்டாரத்தை சல்லடை போட்டு தேடுதல் நடத்திய போதே அருகாமையில் இன்னொரு கிளைமோர் வெடிக்கவைக்க தயார்நிலையில் வைக்கப்பட்டிருந்தமை கண்டு பிடிக்கப்பட்டது. பின்னர் அது வெடிக்கவைத்து செயலிழக்க வைக்கப்பட்டது. ஒரே மாதிரியான பஜரோ வாகனத்தினால் ஏற்பட்ட குழப்பத்தால் தாக்குதல் இலக்கு தவறியுள்ளது. இதனால் இனியபாரதி தப்பித்துள்ளார் என செய்திகள் தெரிவிக்கின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக