15 ஜூலை 2012

புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்திட ஹசன் அலி மறுப்பு.

newsகிழக்கு மாகாண சபைத் தேர்தலில் போட்டியிடுவது குறித்து சிறிலங்கா சுதந்திரக் கட்சியுடன் புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் கையெழுத்து இடும்படி முஸ்லிம் காங்கிரஸ் தலைவர் ரவூப் ஹக்கீம் விடுத்த வேண்டுகோளை கட்சியின் செயலாளர் ஹசன் அலி நேற்று மாலை உறுதியாக நிராகரித்து விட்டார் என நம்பகரமாகத் தெரியவருகிறது.
அரசுக்கும் மு.காவுக்கும் இடையில் புரிந்துணர்வு ஒப்பந்தம் இரண்டு பிரிவுகளைக் கொண்டதாக இருந்தது என்றும் முதலாம் பிரிவு ஆசனப் பங்கீடுகள் குறித்தும் இரண்டாவது பிரிவு நல்லிணக்க ஆணைக்குழுவின் பரிந்துரைகளைச் செயல்படுத்துவது மற்றும் முஸ்லிம் மக்களின் அபிலாசைகளை உள்ளடக்கி இருந்தது என்றும்
இருப்பினும் முதலாவது பிரிவு புரிந்துணர்வு ஒப்பந்தத்தில் மட்டுமே அரசு உடனடியாக கையெழுத்து இட முன்வந்தது என்றும் இரண்டாவது பிரிவில் கையெழுத்து இடுவதற்கு அரசு தயக்கம் காட்டியது என்றும்
இதன் காரணமாகவே மு.கா. சார்பில் கையெழுத்து இடுவதற்கு ஹசன் அலி மறுத்தார் என்றும் அந்த வட்டாரங்கள் தெரிவித்தன.
இரண்டாவது பிரிவில் அரசு கையெழுத்து இடாதவரை எந்தவொரு புரிந்துணர்வு உடன்படிக்கையிலும் அரசுடன் தான் கையெழுத்திடப்போவதில்லை என ஹசன் அலி ஹக்கீமிடம் திட்டவட்டமாகத் தெரிவித்தார்.
இதனையடுத்து கட்சிக்குள் ஏற்கனவே இருந்து வந்த கருத்துப்பிளவுகள் மேலும் அதிகரித்துள்ளது என அரசியல் அவதானிகள் தெரிவித்துள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக