13 ஜூலை 2012

மன்மோகன் சொன்ன நன்றியால் நெகிழ்ந்துபோனதாம் சிறுத்தை.


திண்டிவனம் பகுதியில் கட்சி கொடியேற்றுதல், திருமண விழாக்கள், படத்திறப்பு உள்ளிட்ட நிகழ்ச்சிகளில் திருமாவளவன் கலந்து கொண்டார். அப்போது திருமாவளவன் எம்.பி. பேசியதாவது:-
ஜனாதிபதி, உதவி ஜனாதிபதி தேர்தலுக்கான வேட்பாளர் தேர்வில் விடுதலை சிறுத்தைகள் கட்சியின் ஆலோசனையை கேட்கக்கூடிய தேசிய அளவில் நாம் முக்கியத்துவம் பெற்றுள்ளோம்.
இதை பெருமைக்காக கூறவில்லை. கடந்த 10 நாட்களுக்கு முன்பு ஒரு தொலைபேசி அழைப்பில் பேசியவர் இந்தியாவில் பிரதமர் அலுவலகத்தில் இருந்து பேசுவதாக கூறினார். எனவே ஆச்சரியமாக, எதிர்பார்க்காததுமாக இருந்தது. ஆங்கிலத்தில் பேசுங்கள் என்றேன். சில நொடிகளில் பிரதமரின் குரல் ஒலித்தது. குடியரசு துணைத் தலைவர் வேட்பாளர் தேர்வில் தங்கள் ஆலோசனை வேண்டும் என்றார். அதற்கு நான், ஐக்கிய முற்போக்கு கூட்டணியில் உள்ள நாங்கள், கூட்டணி சார்பில் எந்த வேட்பாளரை நிறுத்தினாலும் ஆதரிப்போம் என்றேன். அதற்கு பிரதமர் நன்றி என்று 3 முறை கூறிவிட்டு தொலைபேசி இணைப்பை துண்டித்தார்.
நாளை (14-ந் தேதி) டெல்லியில் இதுதொடர்பாக நடைபெறும் ஆலோசனை கூட்டத்தில் கலந்து கொள்ள அழைக்கப்பட்டிருக்கிறோம். உங்களின் சார்பாக நான் கலந்து கொள்ள இருக்கிறேன். இதற்கெல்லலாம் காரணம் என் உயிரினும் மேலான 45 லட்சம் தொண்டர்களின் அன்பும், பாசத்தாலும் தான் முடிந்தது. இவ்வாறு அவர் பேசினார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக