28 ஜூலை 2012

றிசாட் விவகாரம் சூடு பிடிக்கிறது! இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒன்றுகூடுகிறது!

risadஅமைச்சர் றிசாத் பதியூதீன் விவகாரத்தில் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் பகிரங்கமாக இன்று ஒன்று கூடி முடிவெடுக்கவுள்ளதாக தெரிய வருகின்றது. முன்னதாக மன்னார் மாவட்டத்தை சேர்ந்த சட்டத்தரணிகள் சிலரும் காலியைச் சேர்ந்த சட்டத்தரணிகளும் அமைச்சர் றிசாத் பதியூதீனிற்கு எதிராக வழக்குகளை தாக்கல் செய்திருந்தனர்.எனினும் இன்றைய தினம் இலங்கை சட்டத்தரணிகள் சங்கம் ஒன்று கூடி சங்கத்தின் சார்பில் வழக்குகளை நேரடியாக தாக்கல் செய்வது தொடர்பான இறுதி முடிவுகளை எடுக்கவுள்ளதாக தெரியவருகின்றது.
இதனிடையே நேற்றும்; மதிய வேளைத் தொழுகையின் பின்னர் கண்டன போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை றிசாத்தின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்திலும் நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மொகைதீன் பள்ளி வாசலில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் முழு அளவினில் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென வீதி வழியாக ஊர்வலமாக பயணித்தனர்.
அதே வேளை கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட றிசாத்தின் ஆதரவாளர்களது கண்டன பேரணிக்கென மன்னாரிலிருந்து 13 பேருந்துகளினில் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக