
இதனிடையே நேற்றும்; மதிய வேளைத் தொழுகையின் பின்னர் கண்டன போராட்டம் மற்றும் ஆர்ப்பாட்டங்களை றிசாத்தின் ஆதரவாளர்கள் யாழ்ப்பாணத்திலும் நடத்தியுள்ளனர்.
யாழ்ப்பாணம் மொகைதீன் பள்ளி வாசலில் நடைபெற்ற இக்கண்டன ஆர்ப்பாட்டத்திற்கு பொலிஸார் முழு அளவினில் ஒத்துழைப்பை வழங்கியிருந்தனர். பின்னர் ஆர்ப்பாட்டகாரர்கள் திடீரென வீதி வழியாக ஊர்வலமாக பயணித்தனர்.
அதே வேளை கொழும்பில் நேற்று நடத்தப்பட்ட றிசாத்தின் ஆதரவாளர்களது கண்டன பேரணிக்கென மன்னாரிலிருந்து 13 பேருந்துகளினில் ஆட்கள் ஏற்றிச் செல்லப்பட்டிருந்ததாக தகவல்கள் கூறுகின்றன.
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக