23 ஜூலை 2012

நிமலரூபனின் சடலம் வவுனியா நோக்கி..!

வவுனியா - சிறையில் ஏற்பட்ட மோதல் நிலையை அடுத்து மஹர சிறைக்கு மாற்றப்பட்டு காயமடைந்த நிலையில் ராகம வைத்தியசாலை அனுமதிக்கப்பட்டு உயிரிழந்த தமிழ் அரசியல் கைதியான நிமலரூபனின் சடலம் தற்போது தனது சொந்த ஊரான வுவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்படுகிறது.
நிமலரூபனின் சடலத்தை பெற்றோரிடம் ஒப்படைக்காது நீர்கொழும்பில் அடக்கம் செய்யுமாறு நீதிமன்றம் அளித்திருந்த தீர்ப்பை ஏற்காத அவருடைய பெற்றோர் சடலத்தை சொந்த ஊருக்கு எடுத்துச் செல்ல அனுமதிக்க வேண்டும் என உயர் நீதிமன்றத்தில் கோரிக்கை விடுத்திருந்தனர்.
இதன்படி கோரிக்கையை ஆராய்ந்த உயர் நீதிமன்றம் நிபந்தனையின் அடிப்படையில் நிமலரூபன் சடலத்தை வவுனியாவிற்கு எடுத்துச் செல்ல அனுமதி அளித்தது.
அமைதியான முறையில் சடலத்தை அடக்கம் செய்ய வேண்டும் என நீதிமன்றம் நிபந்தனை விதித்துள்ளது.
இதன்படி இன்று வவுனியாவுக்கு எடுத்துச் செல்லப்படும் நிமலரூபனின் சடலம் நாளை மாலை வவுனியாவில் நல்லடக்கம் செய்யப்படவுள்ளது.
அமைதியை நிலைநாட்டவென நிமலரூபனின் ஊரில் பொலிஸ் இராணுவ பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளதாக தெரியவந்துள்ளது.
நாளை இறுதிச் சடங்குகளில் பங்குபற்ற மக்கள் கண்காணிப்புக் குழுவின் ஏற்பாட்டாளர் மனோ கணேசன் மற்றும் அதன் தலைவர் சிறிதுங்க ஜயசூரிய உள்ளிட்டோர் வவுனியா செல்லவுள்ளனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக