23 ஜூலை 2012

கூட்டமைப்புடன் கூட்டணி இல்லையென்கிறார் அலி!

தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் கூட்டணி சேரப் போவதில்லை என ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் பொதுச் செயலாளர் ஹசன் அலி தெரிவித்துள்ளார்.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்புடன் ஸ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸ் கூட்டணி சேரப் போவதாக பல்வேறு ஊடகங்களில் செய்தி வெளியிடப்பட்டிருந்தது.
கூட்டமைப்பின் மாவை சேனாதிராஜாவும், முஸ்லிம் காங்கிரஸின் ஹசன் அலியும் இணைந்திருந்த புகைப்படம் ஊடகங்களில் வெளியிடப்பட்டிருந்தது.
ஊடகங்களில் வெளியான இந்த செய்தி வெறும் வதந்தியே தவிர நிஜம் கிடையாது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.
வேட்பு மனுத்தாக்கல் செய்த தினத்தில் வவுனியா கச்சேரியில் மாவை சேனாதிராஜாவை சந்தித்த போது எடுக்கப்பட்ட புகைப்படமே இவ்வாறு ஊடகங்களில் வெளியானதாகத் தெரிவித்துள்ளார்.
ஆளும் ஐக்கிய மக்கள் சுதந்திரக் கூட்டமைப்புடனோ வேறு எந்தக் கட்சியுடனோ புரிந்துணர்வு உடன்படிக்கை எதுவும் கைச்சாத்திடப்படவில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதேவேளை, தேர்தல்களில் எவ்வாறு போட்டியிடுவது என்பது தொடர்பில் நாளைய தினம் கட்சித் தலைமையகத்தில் விசேட கூட்டமொன்று நடைபெறவுள்ளதாகத் தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக