27 ஜூலை 2012

போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்கிய மெல்பேர்ண் (அ)சிங்கத் தமிழர்கள்(படங்கள்)

தமிழின இன அழிப்பின் முக்கிய சூத்திரதாரிகளில் ஒருவரான முன்னாள் போர்க்குற்றவாளியும் இந்நாள் ஒஸ்ரேலியாவுக்கான சிறிலங்காத் தூதுவருமான திஸ்ஸர சமரசிங்கை மெல்பேர்ண்ணைச் சேர்ந்த (அ)சிங்கத் தமிழர்கள் சிலர் சந்தித்துள்ளனர்.
முல்லைத்தீவு முள்ளியவளை வித்தியானந்தக் கல்லூரியின் முன்னாள் மாணவரும் சட்டத்தரணியுமான குகன், சுந்தரமூர்த்தி, பன்னெடுங்காலமாக சிங்கள அரசாங்கத்தின் கைக்கூலியாகச் செயற்பட்டுவரும் மிருக வைத்தியர் நடேசன் மற்றும் சிவநாதன் ஆகியோரே முன்னாள் கடற்படைத் தளபதியான தமிழினக் கொலையாளியை சந்தித்தவர்களாவர்.
போர்க் குற்றவாளிகளைக் கூண்டிலேற்றித் தண்டனை பெற்றுக்கொடுக்க புலம்பெயர் தமிழ் சொந்தங்கள் அல்லும் பகலும் உழைத்துக்கொண்டிருக்க போர்க்குற்றவாளியுடன் கைகுலுக்கும் இவர்களைப் போன்றவர்களும் நம்மவர்கள் மத்தியில் உலாவுகிறார்கள். ”பெற்றதாயை விற்றுப் பணம் காசு வாங்குவதற்கு” இணையான செயலைச் செய்யும் இவர்களைப் போன்ற விச ஜந்துக்களை இனங்கண்டு இவர்களைச் சமூகத்திலிருந்து ஒதுக்குங்கள் உறவுகளே.
தன் சொந்தங்களை கொன்றவனுடன் கைகுலுக்கி விருந்துண்ட ”கோடரிக்காம்புகளின்” படங்கள்

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக