18 ஜூலை 2012

குற்றவாளிகளை மட்டுமே வெள்ளை வானில் கடத்துகிறோம் என்கிறார் கோத்தபாய!

குற்றவாளிகள் மாத்திரமே இலங்கையில் வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள் என்று பாதுகாப்பு செயலாளர் கோத்தபாய ராஜபக்ச தெரிவித்துள்ளார்.
இலங்கையில் வெள்ளை வானால் ஆள்கள்; கடத்தப்படுகிறார்கள் என்ற குற்றச்சாட்டு தொடர்பில் அரச சார்பு பத்திரிகை ஒன்றுக்கு வழங்கிய செவ்வியிலேயே அவர் இதனைத் தெரிவித்துள்ளார்.
இதன்போது, சிறுமிகளை வன்புணர்வுக்கு உட்படுத்துகின்றவர்கள் உட்பட்ட குற்றவாளிகளை சமூகத்தில் இருந்து வெளியேற்ற வேண்டும். அவ்வாறானவர்களே வெள்ளை வானில் கடத்தப்படுகிறார்கள்.
இவர்களை சமூகத்தில் இருந்து பொதுமக்களால் வெளியேற்ற முடியாது எனவேதான் இவ்வாறான உத்தி கையாளப்டுவதாகவும் கோத்தபாய தெரிவித்துள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக