27 ஜூலை 2012

இலங்கையில் எனக்கு கொலைமிரட்டல் விடுக்கப்பட்டது!

2000 ஆம் ஆண்டு இலங்கைக்கு விஜயம் செய்திருந்த போது, தம்மை கொலை செய்ய முயற்சித்ததாக எரிக் சொல்கெய்ம் தெரிவித்துள்ளார். சிங்கள கடும்போக்குச் சக்திகள் தமக்கு கொலை மிரட்டல் விடுத்ததாகக் குறிப்பிட்டுள்ளார்.
2000 ஆம் ஆண்டு மே மாம் 22 ஆம் திகதி முன்னாள் ஜனாதிபதி சந்திரிக்க பண்டாரநாயக்கவை சந்தித்து பேச்சுவார்த்தை நடத்தும் நோக்கில் தாம் உள்ளிட்ட நோர்வே பிரதிநிதிகள் குழு இலங்கைக்கு விஜயம் செய்ததாகத் தெரிவித்துள்ளார்.
இந்த விஜயத்தின் போது குண்டுத் தாக்குதல் நடத்தி தம்மை படுகொலை செய்ய சில தரப்பினர் முயற்சி செய்ததாக எரிக் சொல்ஹெய்ம் தெரிவித்துள்ளார். அப்டீன் போஸ்டின் என்னும் நோர்வேயிலிருந்து வெளியாகும் பத்திரிகைக்கு அளித்த செவ்வியில் அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார்.
படுகொலை முயற்சி தொடர்பான தகவல்களை அப்போதைய பாதுகாப்புதரப்பினருக்கு தாம் வழங்கியதாகத் தெரிவித்துள்ளார். இலங்கைக் கடும்போக்குடைய சிங்கள மக்கள் பற்றி தெரிந்திருந்த, நோர்வேயில் வாழும் மக்களும் கொலை முயற்சி குறித்த தகவல்களை வழங்கியதாகக் குறிப்பிட்டுள்ளார்.
நோர்வே பிரஜைகள் என்ற ரீதியில் உயிர் அச்சுறுத்தல் ஏற்படக் கூடிய ஒரே இடமாக இலங்கை காணப்பட்டது என அவர் சுட்டிக்காட்டியுள்ளார். மெய்ப்பாதுகாவலர்கள் இன்றி தாம் இலங்கையின் எந்தவொரு பகுதிக்கும் விஜயம் செய்ததில்லை என அவர் குறிப்பிட்டுள்ளார். குறித்த விஜயத்தை முடித்துக் கொண்டு சொல்ஹெய்ம் நாடு திரும்பிய அதே தினத்தில் இலங்கைக்கான நோர்வேத் தூதரகம் மீது கைக்குண்டுத் தாக்குதல் நடத்தப்பட்டிருந்தது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக