06 ஜூலை 2012

பிரித்தானியாவில் நடைபெற்ற கரும்புலிகள் நாள் நிகழ்வு.

பிரித்தானியா தமிழர் ஒருங்கிணைப்புக் குழுவின் ஏற்பாட்டில் நேற்று வியாழக்கிழமை மாலை 8.00 மணியளவில் வடகிழக்கு இலண்டனில், கரும்புலிகள் நாள் நிகழ்வு இடம்பெற்றது.தாயகத்தின் இருளகற்றி ஒளிகொடுக்கவும் தமிழீழம் சுதந்திரம் பெறவும் தரணி எங்கும் தமிழீழத் தேசியக் கொடி பட்டொளி வீசிப் பறக்கவும் உடலில் வெடிசுமந்து தமது உடலையே வெடிக்கச் செய்து தமிழீழ விடுதலைப் போராட்டத்தில் புதிய வீர வரலாற்றினைப் பதிவு செய்த உயிர்ப்பூக்கள் நினைவு வணக்க நிகழ்வு மிகவும் உணர்வு பூர்வமாக நடைபெற்றது.
அகவணக்கத்துடன் ஆரம்பமான இந்நிகழ்வில் ஈகச் சுடர் ஏற்றப்பட்டு கரும்புலி மாவீர்களுக்கு மலர் வணக்கம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து கவிதைகள், எழுச்சிப் பாடல்கள், சிறப்புரைகளோடு கரும்புலிகள் நிகழ்வு சுமந்த காணொளிக் காட்சிகளும் காண்பிக்கப்பட்டது.
இறுதியாக தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம் என்ற தாரக மந்திரத்துடன் நிகழ்வு உணர்வு பூர்வமாக நிறைவு பெற்றது.
தமிழரின் தாகம் தமிழீழத் தாயகம்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக