13 ஜூலை 2012

படைகள் வெளியேறவேண்டும் என சுரேஸ் விடுத்த கோரிக்கையை அரசு நிராகரித்து விட்டதாம்.

வடபகுதியில் உள்ள இராணுவப்படையணிகள் 1983 ஆம் ஆண்டில் நிலைக்கொண்டிருந்த இடங்களில் மாத்திரமே வரையறுக்கப்பட வேண்டும் என தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர் சுரேஷ் பிரேமச்சந்திரன் விடுத்த கோரிக்கையை அரசாங்கம் நிராகரித்துள்ளது.
நாடாளுமன்ற உறுப்பினரின் இந்த கோரிக்கை கூட்டமைப்பின் உள்நோக்கத்தை வெளிகாட்டியுள்ளதாக சிரேஷ்ட இராணுவ அதிகாரி ஒருவர் கூறியதாக திவயின தெரிவித்துள்ளது.
1983 ஆம் ஆண்டு வவுனியா, பலாலி இராணுவ முகாம்களை தவிர ஏனைய முகாம்கள் அகற்றப்பட்டதால், விடுதலைப்புலிகள் தம்மை வலுப்படுத்திக் கொள்ள வாய்ப்பு ஏற்பட்டது. இந்த நிலையில் 29 வருடங்களுக்கு பின்னர், இராணுவத்தினரை, அவர்கள் நிலைக்கொண்டுள்ள இடங்களில் இருந்து வெளியேறுமாறு பிரேமச்சந்திரன் விடுத்துள்ள கோரிக்கையானது மீண்டும் நெருக்கடியை ஏற்படுத்த வழிவகுப்பதாகும் எனவும் அந்த அதிகாரி தெரிவித்ததாக திவயின கூறியுள்ளது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக