24 ஜூலை 2012

தேசியத்தலைவரின் திருமண நாளில் தனது திருமணமும் என்கிறார் சீமான்.

பிரபாகரன் திருமண நாளான அக்டோபர் 1ம் நாள் என் திருமணமும் நடக்கும்! – சீமான்தமிழீழ தேசியத்தலைவர் பிரபாகரனுக்கும் மதிவதனிக்கும் திருமணம் நடந்த அக்டோபர் 1-ம் நாள் என் திருமணமும் நடக்கும் என்று நாம் தமிழர் கட்சி தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் அறிவித்தார்.
பாஞ்சாலங் குறிச்சி, தம்பி போன்ற படங்களின் இயக்குனரும், நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளருமான சீமான் விரைவில் திருமணம் செய்ய உள்ளார் என்று கடந்த சில தினங்களாக செய்தி கசிந்து வந்தது.
அவரிடமே இதுபற்றி கேட்டுவிட தீர்மானித்து தொடர்பு கொண்டு கேட்டபோது, சீமான் கூறுகையில்,
ஆம்.. அக்டோபர் ஒன்றில் எனது அண்ணன் பிரபாகரனுக்கும் அண்ணி மதிவதனிக்கும் திருமணம் நடந்த தினம். அன்று திருமணம் செய்துகொள்வது என்ற முடிவிலிருக்கிறேன்.
பெண் யாரெனத்தான் இன்னும் தெரியவில்லை. எப்படியும் அதற்குள் பெண்தேடும் படலம் முடிந்துவிடும். இத்தனை லட்சம் பெண்களில் எனக்கென்று ஒரு பெண் கிடைக்காமலா போய்விடுவாள்?
ஆனால் இந்த வருடம் அக்டோபர் ஒன்றாம் தேதி திருமணம் என்பது உறுதி. எல்லோரையும் அழைத்து விரைவில் அறிவிப்பேன் என்றார்.
சீமான் தான் திருமணம் செய்யவிருக்கும் பெண் யாரென தெரிவிக்கவில்லை. என்றாலும், அவர் திருமணம் செய்ய இருப்பது ஈழத்தைச் சேர்ந்த போராளி விதவைப் பெண்ணான யாழ்மதியை என அவருக்கு நெருக்கமான சிலர் தெரிவித்தனர்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக