30 ஜூலை 2012

கொழும்பு மாநகரசபை செங்கோல் எதிர்க்கட்சியினர் வசம்!

கொழும்பு மாநகர சபையின் செங்கோலை எதிர்கட்சி உறுப்பினர்கள் கைப்பற்றிய நிலையில் மாநகரச சபையில் பதற்றநிலை ஏற்பட்டது. இதனால் சபையின் இன்றைய அமர்வு இடைநிறுத்தப்பட்டுள்ளது.
எதிர்க்கட்சியினருடன் சமத்துவமான இணக்கப்பாடொன்றுக்கு மேயர் வரும்வரை செங்கோலை கொண்டுசெல்ல எதிர்க்கட்சியினர் மாட்டார்கள் என சபையின் ஐ.ம.சு.கூட்டமைப்பு உறுப்பினர் றிஸா ஸரூக் டெய்லி மிரரிடம் கூறினார்.
"160 மில்லியன் ரூபா பெறுமதியான பவுஸர்களை வழங்கியமைக்காக பாதுகாப்பு செயலாளருக்கு நன்றி தெரிவிப்பதற்கு நாம் முன்வைத்த யோசனையை ஏற்றுககொள்ள மறுத்துள்ளார். சபை அமர்வில் இவ்விடயத்தை நாம் முன்வைத்தபோது மேயர் சர்வாதிகாரமாக எமது கோரிக்கையை நிராகரித்தார். எனவே எமக்கு வேறு வழியிருக்கவில்லை. செங்கோலை சபைக்கு வெளியே சபை உறுப்பினர் அநுர சுஜீவ எடுத்துச் சென்றார்" என றிஸா ஸரூக் தெரிவித்தார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக