20 ஜூலை 2012

நீதிமன்ற முடக்கத்தால் நிமலரூபனின் இறுதி நிகழ்வும் இழுபறி நிலையில்!

மன்னார் நீதிமன்றத்தின் மீதான தாக்குதலைக் கண்டித்து சட்டத்தரணிகளும் நீதிவான்களும் இன்று வெள்ளிக்கிழமையிலிருந்து பணிப் புறக்கணிப்பை மேற்கொண்டுவருவதால் நாட்டிலுள்ள சகல நீதிமன்றங்களின் நடவடிக்கைகளும் முடங்கியுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இதனால் சகல நீதிமன்றங்களினதும் இன்றைய வழக்குகள் வேறு திகதிகளுக்கு ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
கொழும்பு மேல் நீதிமன்றத்தில் இன்று வெள்ளிக்கிழமை நடைபெறவிருந்த அனைத்து வழக்குகளும் எதிர்வரும் 27ஆம் திகதிக்கும் நீதிவான் நீதிமன்ற வழக்குகள் எதிர்வரும் 23ஆம் திகதிக்கும் மாவட்ட நீதிமன்ற வழக்குகள் எதிர்வரும் 25ஆம் திகதிக்கும் ஒத்திவைக்கப்பட்டுள்ளன.
நிமலரூபனின் இறுதி சடங்கு பற்றிய முடிவு இன்று நீதிமன்ற விசாரணையின்போது தெரியவரும் என்று அறிவிக்கப்பட்ட நிலையில் நீதிமன்ற நடவடிக்கைகள் முடங்கியுள்ளன.
இதனால் நிமலரூபனின் இறுதி சடங்கு பற்றிய முடிவு இழுபடும் நிலை தோன்றியுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக