14 ஜூலை 2012

நாயை உசுப்பேத்தினால் என்ன செய்யும்?

கோத்தபாய ராஜபக்ஸ யார்? விக்கிரமபாகு கருணாரத்ன பதில்கோத்தபாய ராஜபக்ஸ ஒழுக்கமான முறையில் பேசவில்லை என தெரிவிக்கப்பட்டது.
ஆனால், எமக்குத் தெரியும். நாய் ஒன்றை உசுப்பேத்தினால் ஊ.. பௌ.. என்று கத்தும் அதனைத் தவிர வேறு ஒன்றும் தெரியாது.
தவளையை அடித்தால் ஊ பக.. பக.. என்று சத்தமிடுவதை தவிர வேறு ஒன்றும் அதற்குத் தெரியாது.
ஒழுக்கமான முறை என்று இவரை நினைத்தால் நாம் குற்றவாளிகள்..
அவர் இருக்கும் நிலையில் பதிலளித்துள்ளார். அதுதான் உண்மையான கதை.
அண்மையில் பாதுகாப்புச் செயலாளர் கோத்தபாய ராஜபக்ஸ சண்டே லீடர் பத்திரிகையின் ஆசிரியர் பெட்ரிகா ஜேன்ஸை தொலைபேசி ஊடாக மிரட்டிய சம்பவம் குறித்து கருத்து வெளியிட்ட புதிய இடதுசாரி கட்சியின் தலைவர் கலாநிதி விக்ரமபாகு கருணாரத்னவே இவ்வாறு தெரிவித்தார்.
ஜயவர்த்தனபுர கேந்திர நிலையத்தில் இடம்பெற்ற ஊடக அடக்கு முறைக்கு எதிரான மாநாட்டில் உரையாற்றிய அவர், ராஜபக்ஸ அரசின் மனநிலை தற்போது பாதிக்கப்பட்டுள்ளதாக அவர் சுட்டிக்காட்டியுள்ளார்.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக