26 ஜூலை 2012

அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தயான் அந்தனி இரகசிய பொலிஸாரால் கைது

அகதி அந்தஸ்து கோரிக்கை நிராகரிக்கப்பட்ட நிலையில் அவுஸ்திரேலியாவிலிருந்து நாடு கடத்தப்பட்ட தயான் அந்தனி (வயது 30), இன்று வியாழக்கிழமை அதிகாலை கட்டுநாயக்கா சர்வதேச விமான நிலையத்தை வந்தடைந்த நிலையில் இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
அவுஸ்திரேலிய பாதுகாப்பு அதிகாரிகள் நால்வருடன் இலங்கையை வந்தடைந்த தயான் அந்தனி, விமான நிலைய குடிவரவு குடியகல்வு அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டதன் பின்னரே இரகசிய பொலிஸார் விசாரணைக்காக அழைத்துச் சென்றுள்ளனர்.
இவர் 2010 ஆம் ஆண்டு விமானம் மூலம் அவுஸ்திரேலியாவுக்குச் சென்றதாகவும் தமிழீழ விடுதலைப் புலிகளுடன் தொடர்புபட்டிருந்தமைக்காக இவருக்கு எதிராக 2011 பெப்ரவரி மாதம் பிடிவிறாந்து பிறப்பிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக