16 ஜூலை 2012

சிறையில் கொலை செய்யப்பட்ட நிமலரூபன் தொடர்பில் மூன்று நீதிமன்றங்களில் வழக்குகள்!

வவுனியா சிறைச்சாலை சம்பவத்தின் பின்னர் அடிகாயங்களுக்கு உள்ளாகி ராகம வைத்தியசாலையில் மரணமடைந்த கணேசன் நிமலரூபன் தொடர்பில் வெவ்வேறு நீதிமன்றங்களில் மூன்று வழக்குகள் விசாரிக்கப்படவுள்ளன.
நிமலரூபனின் சடலத்தை அவரது சொந்த ஊராகிய வவுனியா நெளுக்குளத்திற்குக் கொண்டு செல்வதற்கான உத்தரவைக் கோரி, உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டுள்ள வழக்கு விசாரணை ௭திர்வரும் 18 ஆம் திகதி நடைபெறவுள்ளது.
இதேவேளை, நிமலரூபனின் மரணம் தொடர்பாக ராகம நீதிமன்றத்தில் நடைபெறவுள்ள வழக்கு விசாரணை 19 ஆம் திகதி நீர்கொழும்பு நீதிமன்றத்தில் நடைபெறவுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
இந்த விசாரணையின் போது, சமூகமளித்து சாட்சியமளிக்க வேண்டும் ௭ன்று நிமலரூபனின் தாய், தந்தையரை நீர்கொழும்பு நீதிமன்றம் அழைப்பாணை விடுத்துள்ளது.
நிமலரூபனின் சடலத்தை வவுனியா பொலிஸாரின் வேண்டுகோளுக்கிணங்க, மஹர - கடவத்தை நீதிமன்ற நியாயாதிக்கப் பகுதிக்குள்ளேயே அடக்கம் செய்ய வேண்டும் ௭ன்று இம் மாதம் 23 ஆம் திகதி வரையில் கால அவகாசம் வழங்கியுள்ள மஹர - கடவத்தை நீதிமன்றத்தில் 23 ஆம் திகதி வழக்கு விசாரணை நடைபெறவுள்ளது ௭ன்பது குறிப்பிடத்தக்கது.
வவுனியா சிறைச்சாலை சம்பவத்தையடுத்து, சிறைச்சாலை அதிகாரிகளின் பொறுப்பில் இருந்த தமிழ் அரசியல் கைதிகள் 38 பேர் மிக மோசமாகத் தாக்கப்பட்டனர் ௭ன்று தமிழ்த் தேசியக் கூட்டமைப்பும், மனித உரிமை அமைப்புகளும் ஏற்கனவே குற்றம் சுமத்தியிருப்பது தெரிந்ததே.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக