17 ஜூலை 2012

சிறீலங்கா படையதிகாரிகள் தமிழகத்திலிருந்து வெளியேற்றம்.

தமிழகத்தில் பயிற்சிக்குச் சென்ற இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்று காலை வெளியேற்றம்தமிழகம் குன்னூரில் நடைபெற்ற கருத்தரங்கொன்றில் பங்கேற்க சென்றிருந்த இலங்கை இராணுவ அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து வெளியேறினர்.
இலங்கை விமானப் படையினருக்கு இந்தியாவில் பயிற்சி வழங்குவதற்கு கடும் எதிர்ப்பு வெளியாகியுள்ளது. இந்தநிலையில் அங்கு ஒரு கருத்தரங்கில் பங்கேற்க சென்றிருந்த இலங்கை அதிகாரிகள் இன்று காலை அங்கிருந்து வெளியேற்றப்பட்டுள்ளனர்.
குறித்த கருத்தரங்கு நாளை 18 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.
எவ்வாயினும், குறித்த அதிகாரிகளை இந்தியாவில் இருந்து பயிற்சிகளை பெறாமல் நாட்டிற்கு மீள அழைக்க நடவடிக்கை எடுக்கப்போவதில்லை என வான்படைப் பேச்சாளர் தெரிவித்துள்ளார்.
இதனிடையே, குன்னூரில் வான்படை பயிற்சி பெறும் இலங்கை அதிகாரிகளை உடனடியாக வெளியேற்ற வேண்டும் என்று தமிழக அரசியல் கட்சிகளின் தலைவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.
இது குறித்து அவர்கள் நேற்று தனித்தனியே அறிக்கைகளையும் வெளியிட்டுள்ளனர். திராவிட முன்னேற்றக் கழகத் தலைவர் கருணாநிதி, பாட்டாளி மக்கள் கட்சி நிறுவனர் ராமதாஸ், மறுமலர்ச்சி திராவிட முன்னேற்ற கழகத் பொதுச்செயலாளர் வைகோ உள்ளிட்டோர் இந்த அறிக்கைகளை வெளியிட்டுள்ளதாக தெரிவிக்கப்படுகிறது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக