02 ஜூலை 2012

வவுனியா சிறைச்சாலையில் புலிகளின் நினைவு தூபி!

வவுனியா சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டுள்ள புலிகள் இயக்க சந்தேக நபர்கள் கொல்லப்பட்ட புலிகளின் தலைவர்களை நினைவுகூறுவதற்காக சிறைச்சாலைக்குள் நினைவு தூபி ஒன்றை அமைத்திருந்த நிலையில், பாதுகாப்பு தரப்பினரால் கண்டுப்பிடிக்கப்பட்டுள்ளது என தெரிவிக்கப்படுகின்றது.
சிறைக் கூண்டுக்குள், பதுங்கு குழி போல் அமைத்து, அதில் உயிரிழந்த புலிகளின் தலைவர்களது நினைவு தினங்கள் அனுஷ்டிக்கப்பட்டு வந்துள்ளதாக தெரியவருகிறது. வவுனியா சிறைச்சாலையில் பல காலமாக எவ்விதமான சோதனைகளையும் நடத்துவதற்கு,புலிகள் இயக்க சந்தேக நபர்கள் அனுமதிக்கவில்லை எனவும் கடந்த வெள்ளிக் கிழமை, சிறைச்சாலை முற்றாக சோதனைக்கு உட்படுத்தப்பட்டதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக