13 ஆகஸ்ட் 2010

பொன்சேகாவின் கட்சியைச் சேர்ந்த எம்.பிகள் இருவர் உட்பட 11 பேருக்கு விளக்கமறியல்!



ஜனநாயக தேசிய கூட்டமைப்பின் நாடாளுமன்ற உறுப்பினர்களான விஜித ஹெரத் ,அஜித் குமார ஆகியோர் உட்பட அக்கட்சியின் உறுப்பினர்கள் 11 பேரை எதிர்வரும் 16 ஆம் திகதி வரை விளக்கமறியலில் வைக்க வேண்டும் என்று காலி நீதவான் நீதிமன்றம் இன்று உத்தரவிட்டுள்ளது.
காலியில் பொலிஸாருக்கும், தேசிய சுதந்திரக் கூட்டமைப்பினருக்கும் இடையில் நேற்று பின்னேரம் ஏற்பட்ட முறுகல் நிலையின் தொடர்ச்சியாகவே இவர்கள் கைது செய்யப்பட்டனர்.
முன்னாள் இராணுவ தளபதி ஜெனரல் சரத் பொன்சேகாவின் விடுதலையைக் கோரி ஜனநாயக தேசிய கூட்டமைப்பினர் காலியில் ஆர்ப்பாட்டம் நடத்தியபோது இம்முறுகல் நிலை ஏற்பட்டிருந்தது.
காலி பொலிஸ் நிலையத்தில் வைத்து பொலிஸாரை தாக்கினர் என்கிற குற்றச்சாட்டின் பேரிலேயே இரு எம்.பிகளும் கைது செய்யப்பட்டமை குறிப்பிடத்தக்கது.

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக