
இலங்கை அரசாங்கத்துக்கு எதிராக நடவடிக்கைகளை எடுக்கக்கோரி சர்வதேச நாடுகளை கோரப்போவதாக ஜே வி பியின் தலைவர் சோமவன்ச அமரசிங்க தெரிவித்தள்ளார்.
சமீபத்தில் ஜே.வி.பி நாடாளுமன்ற உறுப்பினர்கள் காலியில் வைத்து கைதுசெய்யப்பட்டமையை அடுத்தே இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்படவுள்ளதாக சோமவன்ச தெரிவித்துள்ளார்
அகிம்சை ரீதியான எதிர்ப்புக்களுக்கு இலங்கையில் இடமில்லை என்ற அடிப்படையிலேயே இலங்கை அரசாங்கத்தின் நடவடிக்கை இருப்பதாக அவர் குற்றம் சாட்டினார்
காலியில் சரத் பொன்சேகாவை விடுகவிக்குமாறு கோரி நடத்தப்ட்ட ஆர்ப்பாட்டத்தின் மீது பொலிஸார் கண்ணீர்புகைத்தாக்குதலை நடத்தியதுடன் நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கைதுசெய்தனர் என்பது குறிப்பிடத் தக்கது
கருத்துகள் இல்லை:
கருத்துரையிடுக